For Quick Alerts
For Daily Alerts
Just In
மிஸ்டர் மோடி.. பாதுகாப்பு இல்லாமல் 15 நிமிடம் ரவுண்டு வர முடியுமா?: கேட்கிறது ஆம் ஆத்மி
மும்பை: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியால் ஒரு 15 நிமிடம் தனியாக பாதுகாப்பு இல்லாமல் பயணம் செய்ய முடியுமா என்று கேள்வி கேட்டு புதிய சர்ச்சையை கிளப்பிவிட்டிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி.
மகாராஷ்டிரா மாநிலத்தின் வடமேற்கு மும்பை தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராக போட்டியிடுகிறார் மாயன்க் காந்தி. இவர் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ஒரு கருத்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாயன்க் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில், "மோடி சிங்கமா?.. ஒரு 15 நிமிடம் அவரது சொந்த நாட்டில் பாதுகாப்பு இல்லாமல் ஒரு ரவுண்டு வரச் சொல்லுங்கள் பார்ப்போம்.." என்று கேள்வி கேட்டிருக்கிறார். இதுதான் சர்ச்சையை கிளப்பிவிட்டுவிட்டது.
மோடியின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில்தான் ஆம் ஆத்மி இப்படி சவாலுக்கு அழைக்கிறது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
Comments
English summary
After the AAP Senior leader Mayank Gandhi's tweets on Modi, BJP asks AAP try to threaten Modi Life? on Wednesday.
Story first published: Wednesday, May 7, 2014, 16:22 [IST]