இளம் தலை முறையினருக்கு வழிவிட இதுதான் சரியான நேரம்.. அபினவ் பிந்த்ரா !
சண்டிகர்: இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா தனது ஓய்வு அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இளம் தலைமுறையினருக்கு வழிவிட இதுதான் சரியான தருணம் என தெரிவித்துள்ளார்.
ரியோ ஒலிம்பிக் ஆடவர் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபிநவ் பிந்த்ரா வெண்கலப் பதக்கத்தை நூலிழையில் நழுவவிட்டார். இதற்கு பின் பேட்டியளித்த அவர், எனக்கு என்னுடைய வேலை என்ன என்பது நன்றாக தெரியும். அதற்காக அமைதியாக காத்திருந்தேன் என்றார். என்னுடைய எல்லா திறமையையும் பயன்படுத்தினேன். எனக்கு மிகச்சிறப்பான நாளாக அமைந்தது. ஆனால் அதற்கான பலனாக ஒரு பதக்கம் கூட கிடைக்காதது தான் வருத்தம் அளிக்கிறது.

என்னுடைய ஓய்வுக்கு இது சரியான நேரம் இதுதான். இதை மறுபரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை. இனிபொழுதுபோக்காக கூட துப்பாக்கியை தூக்க மாட்டேன். ஒலிம்பிக்கில் சாதிக்க என்னால் முடிந்த அளவு எல்லா முயற்சிகளையும் செய்துவிட்டேன். இப்படி முடிவு கிடைத்ததும் எனக்கு மகிழ்ச்சிதான் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அபினவ், ஓய்வு அறிவிப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இளம் தலைமுறையினருக்கு வழிவிட இதுதான் சரியான நேரம். ஓய்வு பெறுவது குறித்து கடந்த ஆண்டிலேயே முடிவு செய்திருந்தேன். இப்போது அதனை அறிவித்துள்ளேன். ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கத்தைத் தவறவிட்டாலும் கடுமையாக போராடினேன். அதனாலேயே நான்காவது இடத்தைப் பெற முடிந்ததது.
ஓய்வுக்கு பின் விளையாட்டு அறிவியல் தொடர்பான வர்த்தகத்தில் ஈடுபட உள்ளேன். இதன்படி வீரர்களின் உடல்தகுதி, மருத்துவம், உயர் திறன் கண்டறிதல் போன்ற பணிகளை செய்யும் நிறுவனத்தை துவங்க இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications