உயிருக்கு போராடியவரை போட்டோ, வீடியோ எடுத்த மக்கள்... மரத்துப் போனதா மனித நேயம்?
சாலையில் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் பொதுமக்கள், போட்டோ, வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புனே: மகாராஷ்டிராவில் விபத்தில் சிக்கி ரத்தக்காயங்களோடு உயிருக்குப் போராடிய நபரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லாமல், சுற்றி நின்று வீடியோ மற்றும் போட்டோ எடுத்துள்ளனர். அந்த அளவுக்கு செல்போன் மோகத்தில் மக்கள் சிக்கியுள்ளனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் போஷாரி பகுதியில், நேற்று அடையாளம் தெரியாத கார் ஒன்று மோதியதில் சதிஷ் பிரபாகர் என்ற இளைஞர் பிரபாகர் பலத்த காயமடைந்தார். பின்னர், உயிருக்கு போராடியபடி விபத்தான இடத்திலேயே சாலையில் கிடந்தார்.
இந்தக் கோர விபத்தை நேரில் பார்த்த மக்கள், ரத்தவெள்ளத்தில் கிடக்கும் பிரபாகரை சுற்றி சூழ்ந்து நின்றுகொண்டு, தங்களின் மொபைல் போன்களில் போட்டோ வீடியோ எடுத்தபடி இருந்தனர். ரத்தவெள்ளத்தில் கிடப்பவரை பற்றி கமெண்ட் அடித்தபடி இருந்த மக்கள் அவரைக் காப்பாற்ற முன்வரவில்லை

மரத்துப்போன மனித நேயம்
யாரும் அடிபட்ட பிரபாகரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லலாம் என்று நினைக்கவேயில்லை என்றும், போட்டோ வீடியோ எடுப்பதில் மட்டும் குறியாக மனிதநேயம் இல்லாதவராக இருந்துள்ளனர் என்று நேரில் பார்த்த நபர் தெரிவித்துள்ளார்.
காப்பாற்ற முயன்ற மருத்துவர்
இதனிடையே, அந்த வழியாக சென்ற கார்த்திக்ராஜ் கதே என்ற பல் மருத்துவர், பிரபாகரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது போகும் வழியில் அவர், உயிருக்குப் போராடிய பிரபாகருக்கு, முதல் உதவி சிகிச்சை அளித்தார்.
பரிதாப மரணம்
இருப்பினும் சிறிது நேரத்தில் பிரபாகர் பரிதாபமாக மரணமடைந்தார். மருத்துவமனையில் சோதித்த டாக்டர்களும் மரணத்தை உறுதி செய்தனர். இதில் மிகவும் உடைந்து போனார் மருத்துவர் கார்த்திக்ராஜ் கதே.
பொதுமக்கள் கூட்டம்
இந்த சோக சம்பவம் குறித்து கூறியுள்ள கார்த்திக்ராஜ் கதே," நேற்று மாலை 6.30 மணியளவில் போஷாரியின் இந்திராநகர் கார்னர் பகுதி வழியாக சென்ற போது, பொதுமக்கள் கூட்டமாக இருப்பதைப் பார்த்தேன். அங்கு சென்று பார்த்த போது, அடிபட்டு கிடந்த பிரபாகர் ரத்த வெள்ளத்தில் இருந்தார். ஆனாலும் அவர் சுயநினைவுடன்தான் இருந்தார்.
மொபைல் பைத்தியங்கள்
அப்போது அவர் தனது கை, கால்களை அசைத்தவாறு இருந்தார். அதனைக்கண்ட மக்கள், தங்களது மொபைலில் போட்டோ, வீடியோ எடுத்தனர். உதவிக்கு ஒருவர் கூட முன்வரவில்லை." என்று தெரிவித்துள்ளார் அதிர்ச்சியோடு.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications