டெல்லியில் பிரதமர் மோடி வீடு அருகே துப்பாக்கிச் சூடு...டெல்லி போலீஸ் விசாரணை!
டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ள பகுதியில் இன்று இரவு 8.30 மணியளவில் திடீரென சுப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் எதிர்பாராதவிதமாக நடந்ததாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையின் 7 ஆம் எண் கொண்ட பங்களா பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லம் ஆகும். சுமார் 12 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. இங்கு ஐந்து பங்களாக்கள் உள்ளன. இதே பகுதியில் மோடியின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகம் அருகே மீடியாவை சேர்ந்தவர்கள் வாகனம் நிறுத்தும் இடத்தில் இன்று மாலை திடீரென துப்பாக்கிச்சுடும் சத்தம் கேட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், டெல்லியில் 7, ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள பிரதமர் இல்லம் அருகே உள்ள காவல் சோதனை சாவடியில் இருக்கும் பாதுகாவலரின் துப்பாக்கி எதிர்பாராதவிதமாக இயங்கியதால் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.
சுமார் 8.30 மணியளவில் பணியில் இருந்த பாதுகாலர்களின் பணி நேரம் முடிந்து, அடுத்த அணி பாதுகாவலர்கள் பணிக்கு வந்த போது துப்பாக்கிகளும் மாற்றம் செய்துக்கொள்ளப்பட்டதாகவும், அப்போது எதிர்பாராத விதமாக 3 முறை துப்பாகி சூடு நடைபெற்றதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் எந்த உயிரச்சேதமும் ஏற்படவில்லை என போலீஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு முன்னதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இதே ரேஸ்கோர்ஸ் பங்களாவில் சுமார் பத்து ஆண்டுகளாகத் தங்கி இருந்தார்.












Click it and Unblock the Notifications