தெருக்களில் சுற்றிதிரியும் பசுக்களுக்கு தங்குமிடம்...உ.பி., முதல்வர் அதிரடி உத்தரவு
Recommended Video

லக்னோ: உத்தரபிரதேசத்தில் தெருக்களில் திரியும் பசுக்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் கூறியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, தெருக்களில் திரியும் பசுக்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கான பரிந்துரைகளை தலைமைச் செயலாளர் ஒரு வாரத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதோடு, கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களை மீட்பதுடன், ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம பஞ்சாயத்து அளவில், தேவையான தீவனம், கொட்டகை மற்றும் குடிநீர் வசதிகளுடன் கூடிய, 750 கோசாலைகள் அமைக்கப்பட வேண்டும். இதற்காக, 16 மாநகராட்சிகளுக்கு, தலா, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
கோசாலைகள் அமைக்கப்படுவதை கண்காணித்து, அதிகாரிகள் அறிக்கை அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications