குஜராத் சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டுக்கு மும்பை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் அளித்தது!
மும்பை: வெளிநாட்டு நிதி உதவி பெற்று மத்திய அரசுக்கு எதிராக செயல்பட்ட வழக்கில் குஜராத் சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டுக்கு மும்பை உயர்நீதிமன்றம் இன்று முன்ஜாமீன் வழங்கியது.
குஜராத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் செதல்வாட், 2002ஆம் ஆண்டு கோத்ரா கலவரங்களை வெளி உலகுக்கு அம்பலப்படுத்தியவர்களில் முக்கியமானவர். டீஸ்டா செதல்வாட்டின் சப்ரங்க் கம்யூனிகேஷன்ஸ் பப்ளிசிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மற்றும் என்.ஜி.ஓ. அமைப்புகள் வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட நிதி உதவியை இந்திய அரசுக்கு எதிரான பிரசாரத்துக்கு பயன்படுத்தியதாக குஜராத் அரசு புகார் அளித்தது.

இதனடிப்படையில் உள்துறை அமைச்சகம் விசாரணைகளை நடத்தி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் செதல்வாட்டின் என்.ஜி.ஓ. தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதனிடையே டீஸ்டா செதல்வாட் சி.பி.ஐ. முன்பு ஆஜராகி இந்த வழக்கு தொடர்பாக வாக்குமூலம் அளித்தார். அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து டீஸ்டா செதல்வாட் மற்றும் அவரது கணவர் ஜாவேத் ஆகியோர் கைது செய்யப்படலாம் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் இருவரும் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவரது முன் ஜாமீன் மனுவும் தள்ளுபடியானது.
இதனைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்தில் இருவரும் முன் ஜாமீன் கோரி மனுவைத் தாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணையின் போது, டீஸ்டா செதல்வாட்டால் தேசப்பாதுகாப்புக்கு ஆபத்தானது என சி.பி.ஐ. தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால் இந்த வாதத்தை நிராகரித்த மும்பை உயர்நீதிமன்றம் டீஸ்டா செதல்வாட், அவரது கணவர் ஜாவேத் அனந்த் ஆகியோருக்கு முன் ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications