Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கவே கூடாது... ரஜினி நண்பர் அம்பரீஷ் கடிதம்!

காவிரியில் இருந்து எந்த காரணத்திற்காகவும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக் கூடாது என்று நடிகரும் எம்எஎல்ஏவுமான அம்பரீஷ் கர்நாடக மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு : காவிரியில் இருந்து எந்த காரணத்தை கொண்டு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக் கூடாது என்றும் தமிழக முதல்வரின் கோரிக்கையை பொருட்படுத்த வேண்டாம் என்றும் நடிகரும், எம்எல்ஏவுமான அம்பரீஷ் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அம்பரீஷ் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திற் காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் முதல்வர் பழனிசாமி கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு கடிதம் எழுதினார். அதற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான அம்பரீஷ் முதல்வர் சித்தராமையாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் எக்காரணம் கொண்டும் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கூடாது. கடிதத்தில் தண்ணீர் கேட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருப்பதை பொருட்படுத்த வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில்லை என்ற இதே நிலைப்பாட்டில் திடமாக இருக்கும்படியும் சித்தராமையாவை கேட்டுக் கொண்டுள்ள அம்பரீஷ், இதற்கு போதிய ஆதரவை தாமும் கர்நாடக விவசாய சங்கங்களும் அளிக்க தயார் என கூறியுள்ளார். மேலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில்லை என முதல்வர் சித்தராமையாவின் முடிவையும் அவர் வரவேற்றுள்ளார்.

கர்நாடகத்தில் நிலவும் வறட்சியை சமாளிக்கவே போதிய தண்ணீர் இல்லாத போது, தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் தர முடியும் என அவர் வினவியுள்ளார். எனவே அணைகளில் இருக்கும் தண்ணீரை பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கும், கர்நாடக விவசாயிகளின் பயிர் சாகுபடிக்கும் பயன்படுத்துமாறு சித்தராமையாவை அம்பரீஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

காவிரியில் இருந்து தமிழக மக்களுக்குத் தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று அந்த மாநில முதல்வருக்கு வலியுறுத்தியுள்ள அம்பரீஷ் தமிழக அரசியல் களம் காணப் போவதாகவும், பிரச்னைகளைத் தீர்க்கப் போவதாகவும் சொல்லும் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்

பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்

தண்ணீர் கேட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருப்பதை பொருட்படுத்த வேண்டாம் எனவும் அம்பரீஷ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில்லை என்ற இதே நிலைப்பாட்டில் திடமாக இருக்கும்படியும் சித்தராமையாவை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சித்தராமையா முடிவுக்கு வரவேற்பு

சித்தராமையா முடிவுக்கு வரவேற்பு

இதற்கு போதிய ஆதரவை தாமும் கர்நாடக விவசாய சங்கங்களும் அளிக்க தயார் என கூறியுள்ளார். மேலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில்லை என முதல்வர் சித்தராமையாவின் முடிவையும் அவர் வரவேற்றுள்ளார்.

தமிழகத்திற்கு எப்படி தர முடியும்

தமிழகத்திற்கு எப்படி தர முடியும்

கர்நாடகத்தில் நிலவும் வறட்சியை சமாளிக்கவே போதிய தண்ணீர் இல்லாத போது, தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் தர முடியும் என அவர் வினவியுள்ளார். எனவே அணைகளில் இருக்கும் தண்ணீரை பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கும், கர்நாடக விவசாயிகளின் பயிர் சாகுபடிக்கும் பயன்படுத்துமாறு சித்தராமையாவை அம்பரீஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

ரஜினியின் நண்பர் அம்பரீஷ்

ரஜினியின் நண்பர் அம்பரீஷ்

காவிரியில் இருந்து தமிழக மக்களுக்குத் தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று அந்த மாநில முதல்வருக்கு வலியுறுத்தியுள்ள அம்பரீஷ் யார் தெரியுமா? தமிழக அரசியல் களம் காணப் போவதாகவும், பிரச்னைகளைத் தீர்க்கப் போவதாகவும் சொல்லும் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+