நடிகை ரம்யாவின் தந்தை யார்?
பெங்களூர்: நடிகை ரம்யா கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது தந்தை பெயர் ஆர்.டி.நாராயணன் என குறிப்பிட்டுள்ளார்.
இதை எதிர்த்து சி.வெங்கடேஷ்பாபு என்பவர் பெங்களூர் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

நடிகை ரம்யா தனது வேட்பு மனுவில் ஆர்.டி.நாராயணன் என்வவர் தனது தந்தை என்றும் அவர் இறந்து விட்டார் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
மறைந்த ஆர்.டி.நாராயணன் நடிகை ரம்யாவை தத்தெடுத்து வளர்த்தார். நான் தான் ரம்யாவின் உண்மையான அப்பா. என்னை மறைத்து விட்டு வேட்பு மனுவில் பொய்யான தகவலை அளித்திருப்பது சட்டப்படி குற்றமாகும்.
நடிகை ரம்யா என்னை அப்பாவாக ஏற்க மறுத்தால் அவருடைய உண்மையான அப்பா யார் என்பதை அவர் நீதி மன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது. இது குறித்து ரம்யா கூறும்போது எனக்கு அப்பா என்று சொல்லித் திரியும் சி.வெங்கடேஷ் பாபு யார் என்றே எனக்கு தெரியாது என்றார்.












Click it and Unblock the Notifications