Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வைப்ரன்ட் குஜராத் 2026 மாநாடு: கட்ச்சில் ₹1.5 லட்சம் கோடி முதலீட்டை அறிவித்த அதானி குழுமம்!

Subscribe to Oneindia Tamil

காந்தி நகர்: இந்திய வளர்ச்சிக்குக் குஜராத்தின் முக்கிய பங்கை எடுத்துக் காட்டும் வகையில் வைப்ரண்ட் குஜராத் சர்வதேச உச்சி மாநாடு 2026 நடைபெற்றது. மாநிலத்தின் தொழில், உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சிப் பயணத்தில் அதானி குழுமம் தனது ஆழமான அர்ப்பணிப்பை இம்மாநாட்டில் உறுதிப்படுத்தியது.

இந்த மாநாட்டில் அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல லிமிடெட்டின் (APSEZ) நிர்வாக இயக்குநர் கரண் அதானி உரையாற்றினார். தொலைநோக்குப் பார்வை, நிலையான நிர்வாகம், பெரிய உள்கட்டமைப்பு ஆகியவற்றால் குஜராத் மற்றும் இந்தியா உலக முதலீட்டுக்குக் கவர்ச்சியான இடங்களாக மாறியுள்ளதாகக் கூறினார்.

Adani Group Commits 1 5 Lakh Crore Investment in Kutch at Vibrant Gujarat 2026

அதானி குழுமத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டதே குஜராத் தான் எனக் குறிப்பிட்ட அவர், ஆரம்பம் முதலே தங்கள் குழுமத்தின் வளர்ச்சிக்குக் குஜராத் மாநிலமே மையாக இருந்ததாகக் குறிப்பிட்டார். இன்று நாட்டின் முன்னணி உள்கட்டமைப்பு, எரிசக்தி நிறுவனமாக அதானி குழுமம் உருவெடுப்பதிலும் குஜராத்திற்கு முக்கிய பங்கு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அதானி

கட்ச்சில் உள்ள முந்திராவை அதானி குழுமத்தின் "கர்ம பூமி" என கரண் அதானி விவரித்தார். இது இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகத் துறைமுகமாகவும், முழு ஒருங்கிணைந்த பல்திறன் தளவாட மையமாகவும் வளர்ந்துள்ளது. தற்போது தளவாடங்கள், உற்பத்தி, எரிசக்தித் துறைகளில் முக்கிய வசதிகளைக் கொண்ட தொழில்துறை சூழலியல் அமைப்பாகவும் முந்திரா உருவெடுத்துள்ளது.

கட்ச்சில் உருவாகும் காவ்டா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் 37 ஜிகாவாட் திறனுடன் உலகின் மிகப் பெரிய பூங்காவாக உருவாகி வருகிறது. இது இந்தியாவின் தூய்மையான எரிசக்தி, எரிசக்தி பாதுகாப்பு இரண்டின் சின்னமாக இருக்கும். இந்தத் திட்டங்கள் எப்படி வளர்ச்சி, நிலைத்தன்மை, காலநிலை பொறுப்பு ஆகியவை ஒருங்கிணைந்து செல்ல முடியும் என்பதை நிரூபிக்கும் என்றார் கரண் அதானி.

மிக பெரிய முதலீடு

குஜராத்தின் வளர்ச்சிப் பாதையில் நம்பிக்கையுடன், அதானி குழுமம் அடுத்த ஐந்தாண்டுகளில் கட்ச் பிராந்தியத்தில் ₹1.5 லட்சம் கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கம், துறைமுகம் மற்றும் தளவாட உள்கட்டமைப்பு வலுப்படுத்துதல், தொழில்துறை வளர்ச்சி ஆகியவையே இதன் முக்கிய இலக்குகளாக இருக்கும். அடுத்த பத்தாண்டுகளில் முந்திரா துறைமுகத்தின் திறனை இரட்டிப்பாக்கவும் அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. இந்திய வர்த்தகம் மற்றும் தளவாடத் திறன்களை இது வலுப்படுத்தும்.

நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம்

அதானி குழுமத்தின் ஒவ்வொரு முதலீடும் வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில் போட்டித்தன்மை, நிலைத்தன்மை, நீண்டகால ஸ்திரத்தன்மை போன்ற இந்தியாவின் தேசிய முன்னுரிமைகளுடன் ஒத்துப் போவதாகக் கரண் அதானி கூறினார். கொள்கை நிலைத்தன்மையும், கூட்டாட்சியுமே தொழில் நிறுவனங்கள் நம்பிக்கையுடன் முதலீடு செய்ய உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார். வளர்ச்சியில் குஜராத் தொடர்ந்து நாட்டின் முன்மாதிரியாகத் திகழ்கிறது என்றும் கரண் அதானி மேலும் தெரிவித்தார்.

விக்சித் பாரத் 2047

விக்சித் பாரத் 2047 இலக்கை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் அதானி குழுமம் நம்பிக்கைக்குரிய நிறுவனமாகச் செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.. குஜராத்தை மையமாகக் கொண்டு, வலிமையான, தன்னம்பிக்கை கொண்ட சர்வதேச அளவில் மதிக்கப்படும் இந்தியாவை உருவாக்க அதானி குழுமம் இலக்கு கொண்டுள்ளது.

வைப்ரண்ட் குஜராத் மாநாடு, நிலையான முதலீடுகள், அமைப்புகளின் பலம், அரசு-தனியார் ஒத்துழைப்பு ஆகியவை இந்தியாவின் அடுத்தகட்ட வளர்ச்சியை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+