சூரியனை ஆராய புறப்பட்ட ஆதித்யா எல் 1.. சூலூர்பேட்டை செங்காளம்மாவிடம் வேண்டிய இஸ்ரோ தலைவர் சோம்நாத்
திருப்பதி: ஆதித்யா எல்1 மிசன் வெற்றி பெற வேண்டி சூலூர்பேட்டை செங்காளம்மா பரமேஸ்வரி கோயிலில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் சிறப்பு பூஜை செய்தார். ஆதித்யா எல்1க்குப் பிறகு, எங்களின் அடுத்த வெளியீடு ககன்யான் திட்டம் என்றும் கூறியுள்ளார் சோம்நாத்
சூரியனை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா L1 விண்கலத்தை சுமந்து கொண்டு PSLV-C57 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. எல்லோர் கண்களும் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தை நோக்கி குவிந்துள்ளன. சந்திரயான் 3 வெற்றியை அடுத்து சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவப்படுகிறது.

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கி தனது ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. நிலவில் இருந்து பல்வேறு தகவல்களை பிரக்யான் ரோவர் அனுப்பி வருகிறது. சந்திரயான்-3 தரையிறக்கத்தின் மூலம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, அடுத்ததாக சூரியனை ஆராய்ச்சி செய்யும் ஆதித்யா எல்1 செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பவுள்ளது. இதற்கான ஒத்திகை ஏற்கனவே வெற்றிகரமாக முடிந்துள்ளது
ஆதித்யா எல் 1 வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். இறைவனையும் வேண்டிக்கொண்டுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்றைய தினம் விஞ்ஞானிகள் சிறப்பு வழிபாடு நடத்தினர். அதே போல ஆதித்யா எல்1 திட்டம் தொடர்பாக சூலூர்பேட்டை செங்காளம்மா பரமேஸ்வரி கோயிலில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் சிறப்பு பூஜை நடத்தினார். பிஎஸ்எல்விசி 57 ராக்கெட் மாதிரியை சிறப்பு பூஜையில் வைத்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் வழிபாடு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோம்நாத், ஆதித்யா எல்1 இன் கவுன்ட் டவுன் தொடங்கியுள்ளது சனிக்கிழமை காலை 11.50 மணியளவில் விண்ணில் ஏவப்படும். ஆதித்யா எல்1 செயற்கைக்கோள் நமது சூரியனை ஆய்வு செய்வதற்காக உள்ளது. இது எல்1 புள்ளியை அடைய இன்னும் 125 நாட்கள் ஆகும். இது மிகவும் முக்கியமான ஏவுதல். சந்திராயன்-4 குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை; விரைவில் அறிவிப்போம்.
ஆதித்யா எல்1க்குப் பிறகு, எங்களின் அடுத்த வெளியீடு ககன்யான், இது அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெறும். ஆதித்யா 15 லட்சம் கி.மீ. தொலைவில் லாங்ரேஜியன் பாயின்ட்1 சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்படும் என கூறினார். மேலும், சந்திரயான் -3 தொடர்பான லேண்டர், ரோவர் நிலவில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications