Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூரியனை ஆராய புறப்பட்ட ஆதித்யா எல் 1.. சூலூர்பேட்டை செங்காளம்மாவிடம் வேண்டிய இஸ்ரோ தலைவர் சோம்நாத்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: ஆதித்யா எல்1 மிசன் வெற்றி பெற வேண்டி சூலூர்பேட்டை செங்காளம்மா பரமேஸ்வரி கோயிலில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் சிறப்பு பூஜை செய்தார். ஆதித்யா எல்1க்குப் பிறகு, எங்களின் அடுத்த வெளியீடு ககன்யான் திட்டம் என்றும் கூறியுள்ளார் சோம்நாத்

சூரியனை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா L1 விண்கலத்தை சுமந்து கொண்டு PSLV-C57 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. எல்லோர் கண்களும் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தை நோக்கி குவிந்துள்ளன. சந்திரயான் 3 வெற்றியை அடுத்து சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவப்படுகிறது.

Aditya L1 launch today ISRO chief S Somnath prays Chengalamma Parmeshwari mandir

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கி தனது ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. நிலவில் இருந்து பல்வேறு தகவல்களை பிரக்யான் ரோவர் அனுப்பி வருகிறது. சந்திரயான்-3 தரையிறக்கத்தின் மூலம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, அடுத்ததாக சூரியனை ஆராய்ச்சி செய்யும் ஆதித்யா எல்1 செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பவுள்ளது. இதற்கான ஒத்திகை ஏற்கனவே வெற்றிகரமாக முடிந்துள்ளது

ஆதித்யா எல் 1 வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். இறைவனையும் வேண்டிக்கொண்டுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்றைய தினம் விஞ்ஞானிகள் சிறப்பு வழிபாடு நடத்தினர். அதே போல ஆதித்யா எல்1 திட்டம் தொடர்பாக சூலூர்பேட்டை செங்காளம்மா பரமேஸ்வரி கோயிலில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் சிறப்பு பூஜை நடத்தினார். பிஎஸ்எல்விசி 57 ராக்கெட் மாதிரியை சிறப்பு பூஜையில் வைத்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் வழிபாடு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோம்நாத், ஆதித்யா எல்1 இன் கவுன்ட் டவுன் தொடங்கியுள்ளது சனிக்கிழமை காலை 11.50 மணியளவில் விண்ணில் ஏவப்படும். ஆதித்யா எல்1 செயற்கைக்கோள் நமது சூரியனை ஆய்வு செய்வதற்காக உள்ளது. இது எல்1 புள்ளியை அடைய இன்னும் 125 நாட்கள் ஆகும். இது மிகவும் முக்கியமான ஏவுதல். சந்திராயன்-4 குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை; விரைவில் அறிவிப்போம்.

ஆதித்யா எல்1க்குப் பிறகு, எங்களின் அடுத்த வெளியீடு ககன்யான், இது அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெறும். ஆதித்யா 15 லட்சம் கி.மீ. தொலைவில் லாங்ரேஜியன் பாயின்ட்1 சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்படும் என கூறினார். மேலும், சந்திரயான் -3 தொடர்பான லேண்டர், ரோவர் நிலவில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+