திமுக எம்பி திருச்சி சிவாவை சரமாரியாக அடித்த அதிமுக எம்பி சசிகலா புஷ்பா-டெல்லி ஏர்போர்ட் 'பரபர'
டெல்லி: திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவாவை அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா டெல்லி விமான நிலையத்தில் சரமாரியாக அடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். குடிபோதையில் அதிமுக நிர்வாகி ஒருவரிடம் ஆபாசமாக சசிகலா புஷ்பா பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதனைத் தொடர்ந்து திருச்சி சிவாவும் சசிகலா புஷ்பாவும் மிகவும் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாகின. ஆனால் இந்த படங்கள் மார்பிங் செய்யப்பட்டவை என திருச்சி சிவாதரப்பில் கூறப்பட்டது.
Delhi: AIADMK's MP Sasikala Pushpa and DMK's MP Tiruchi Siva got into a scuffle at IGI airport. Both were to board a flight to Chennai.
— ANI (@ANI_news) July 30, 2016
அதே நேரத்தில் அப்போது வெளியான படங்களில் மார்பிங் செய்யப்பட்டவையும் இருக்கிறது; ஒரிஜனல் போட்டோக்களும் இருக்கின்றன எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் சென்னைக்கு வருவதற்காக திருச்சி சிவாவும் சசிகலா புஷ்பா தமது குடும்பத்தினருடனும் காத்திருந்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வாக்குவாதம் முற்றி திருச்சி சிவாவின் கன்னத்தில் சரமாரியாக சசிகலா புஷ்பா அடித்ததாராம்... இதனால் டெல்லி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.