நாங்கள் மொழிப்பெயர்ப்பாளர்களை நியமிக்கவில்லை.. அடித்து சொல்லும் அதிமுக எம்பி விஜிலா சத்தியானந்த்
தமிழக அரசு மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்கவில்லை என நாடாளுமன்றத்தில் அதிமுக மறுப்பு தெரிவித்துள்ளது.
Recommended Video

டெல்லி: தமிழக அரசு மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்கவில்லை என நாடாளுமன்றத்தில் அதிமுக மறுப்பு தெரிவித்துள்ளது.
நீட் தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக அரசு நியமித்த மொழிப்பெயர்ப்பாளர்களே காரணம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

நீட் தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து அதிமுக எம்பிக்கள் ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நீட் வினாத்தாளை மொழிபெயர்ப்பு செய்ய தமிழக அரசு நியமித்தவர்களையே பயன்படுத்தினோம்.
மொழி பெயர்ப்பு தவறாக இருந்ததற்கு மத்திய அரசு பொறுப்பல்ல. அடுத்தாண்டு முதல், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்கப்படும் என்றார்.
இந்நிலையில் மத்திய அமைச்சரின் புகாருக்கு அதிமுக எம்பி விஜிலா சத்தியானந்த் மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழக அரசு மொழிப்பெயர்ப்பாளர்களை நியமிக்கவில்லை.
சிபிஎஸ்இ தான் மொழிபெயர்ப்பாளர்களை நியமித்ததாக விஜிலா சத்தியானந்த் புகார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications