மோடி சர்க்காரில் மொத்தம் 20 'கிரிமினல்' அமைச்சர்கள்! 59 கோடீஸ்வரர்கள்!!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் உள்ள 66 பேரில் 20 பேர் கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்பவர்கள்; 59 பேர் கோடீஸ்வரர்கள் என்கின்றன புள்ளி விவரங்கள்.
மத்திய அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமையன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிய அமைச்சர்களாக 21 பேர் பதவி ஏற்றுக் கொண்டனர்.

இந்த 21 பேரில் 8 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்கிறது ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு (ADR). இது பற்றிய அந்த அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரம்:
- கடந்த மே மாதம் 45 அமைச்சர்களுடன் மோடி அமைச்சரவை பதவியேற்றது. இதில் 12 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தன.
- ஞாயிற்றுக்கிழமையன்று மேலும் 21 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இவர்களில் 8 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
- 21 புதிய அமைச்சர்களில் 4 பேர் மீது மிகவும் கடுமையான கிரிமினல் வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.
- ஒட்டுமொத்தமாக மொத்தம் 11 அமைச்சர்கள் மீது கடுமையான கிரிமினல் வழக்குகள் உள்ளன.
- ஆக்ரா தொகுதி எம்.பியான அமைச்சர் ராம்சங்கர் கதேரியா மீது மட்டும் 21 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
- ராம்சங்கர் கதேரியா மீது பலாத்கார முயற்சி, மதநல்லிணக்கத்தை சீர்குலைத்தல், மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- மத்திய அமைச்சர்கள் ஹன்ஸ்ராஜ் மீது 11, பண்டாரு தத்தாத்ரேயா மீது 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
- சாத்வி நிரஞ்சன் ஜோதி, கிரிராஜ்சிங் ஆகியோர் மீதும் வழக்குகள் உள்ளன.
- அமைச்சர்கள் ராம்கிருபால் யாதவ், ராஜிவ் பிரதாப் ரூடி, முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் மீது தலா ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.
- மத்திய அமைச்சர்களில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையும் 40-ல் இருந்து 59 ஆக அதிகரித்துள்ளது.
- அதாவது மத்திய அமைச்சர்களில் 92% பேர் கோடீஸ்வரர்கள்.
- புதிய அமைச்சர்களில் ஒய்.எஸ். சவுத்ரி (ஆந்திரா)தான் ரூ189.69 கோடி சொத்து மதிப்புடையவர்.
- சவுத்ரிக்கு அடுத்ததாக ஜெயந்த் சின்ஹா ரூ55.67 கோடி, மகேஷ் சர்மா ரூ 47.37 கோடி சொத்துகளை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications