குஜராத்தில் அத்வானி; நரேந்திர மோடியுடன் சந்திப்பு!
அகமதாபாத்: பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக அத்வானி இன்று அம்மாநிலத்துக்கு சென்றார்.
குஜராத் வந்த அத்வானி, நரேந்திர மோடியை அகமதாபாத்தில் சந்தித்துப் பேசினார். குஜராத்தில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக கலந்து கொள்கின்றனர்.
முன்னதாக குஜராத் வரும் அத்வானிக்கு அனைத்து இடங்களிலும் மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று பாஜகவினருக்கு மோடி உத்தரவிட்டிருந்தார்.
இருப்பினும் நரேந்திர மோடியை லோக்சபா தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக நியமித்த போது, பிரதமர் வேட்பாளராக அறிவித்த போதும் கடுமையாக அத்வானி எதிர்த்தார். அதனால் டெல்லியில் அத்வானி வீட்டு முன்பு மோடி ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
பின்னர் போபால் பொதுக் கூட்டத்தில் அத்வானியின் காலைத் தொட்டு மோடி ஆசீர்வாதம் பெற்ற போதும் கூட அவரை கண்டுகொள்ளாமல் அத்வானி இருந்தார். அதனால் குஜராத் பாஜகவினர் தற்போது அத்வானியை அதிருப்தியுடன்தான் வரவேற்பார்கள் என்று கூறப்படுகிறது.