பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் அத்வானி படம் திடீர் அகற்றமா?
பெங்களூரு: பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறும் இடத்தில், வைக்கப்பட்டிருந்த அத்வானி போட்டோ அகற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூருவில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் இன்று தொடங்கி, இரு நாட்கள் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பாஜகவின் அத்தனை மூத்த தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

அத்வானிக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அத்வானி பேசுவற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனிடையே நகரத்தில் ஒட்டியுள்ள எந்த போஸ்டர்களிலும், அத்வானியின் படம் கிடையாது.
ஆனால், செயற்குழு கூட்டம் நடைபெறும், நட்சத்திர ஹோட்டலில், மோடி, வாஜ்பாய், அத்வானி போன்றோரின் படங்களுடன் பின்புறத்தில் கட்-அவுட் வைக்கப்பட்டிருந்ததாகவும், யாரிடமோ இருந்து வந்த உத்தரவால், அந்த பேனர் நேற்றிரவே அகற்றப்பட்டுவிட்டதாகவும், பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்பிறகு இன்று மீண்டும் அத்வானி படத்துடன் பேனர்கள் இடம்பெற்றுள்ளன. பேனரில், அத்வானி மட்டுமின்றி, வாஜ்பாய், மோடி, அமித்ஷா ஆகியோர் படங்களும் உள்ளன.
அத்வானிக்கு, இந்த கூட்டத்தில் பேச அனுமதி கிடைக்கவில்லை என்றால், அவரது சகாப்தம் முடிந்துவிட்டதாகவே கருதப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications