நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை என்று யார் சொன்னது ? அத்வானி பதில்
டெல்லி: நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை என்ற கேள்விக்கே இடம் இல்லை என்றும் கருத்து சுதந்திரம் இல்லை என்று யார் சொன்னது என்றும் பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
குடியரசு தினத்தை யொட்டி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் அத்வானி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் நஜ்மா ஹெப்துல்லா, ராஜீவ் பிரதாப் ரூடி மற்றும் பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அத்வானி கூறுகையில், நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை என்று யார் சொன்னது? அப்படிப்பட்ட கேள்விக்கே இப்போது இடம் இல்லை. நம் நாட்டில் பேச்சு சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கருத்து சுதந்திரத்தை நசுக்க முயன்ற போது மக்கள் அதற்கு எதிராக கடுமையாக போராடினர். நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை அத்வானி மறுத்தார்.
நாட்டின் அவசர நிலை காலத்தை நினைவுகூர்ந்த அத்வானி, நமது அரசாங்கம் இதை முயற்சித்த போதும், மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறினார். மேலும், நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் தேசபக்தியை வளர்க்கவேண்டும் என்றும் அப்போது அவர் கூறினார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் தாங்கள் பெற்ற விருதுகளை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்தனர். நாட்டில் பேச்சு சுதந்திரம் நசுக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications