நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை என்று யார் சொன்னது ? அத்வானி பதில்
டெல்லி: நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை என்ற கேள்விக்கே இடம் இல்லை என்றும் கருத்து சுதந்திரம் இல்லை என்று யார் சொன்னது என்றும் பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
குடியரசு தினத்தை யொட்டி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் அத்வானி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் நஜ்மா ஹெப்துல்லா, ராஜீவ் பிரதாப் ரூடி மற்றும் பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அத்வானி கூறுகையில், நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை என்று யார் சொன்னது? அப்படிப்பட்ட கேள்விக்கே இப்போது இடம் இல்லை. நம் நாட்டில் பேச்சு சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கருத்து சுதந்திரத்தை நசுக்க முயன்ற போது மக்கள் அதற்கு எதிராக கடுமையாக போராடினர். நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை அத்வானி மறுத்தார்.
நாட்டின் அவசர நிலை காலத்தை நினைவுகூர்ந்த அத்வானி, நமது அரசாங்கம் இதை முயற்சித்த போதும், மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறினார். மேலும், நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் தேசபக்தியை வளர்க்கவேண்டும் என்றும் அப்போது அவர் கூறினார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் தாங்கள் பெற்ற விருதுகளை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்தனர். நாட்டில் பேச்சு சுதந்திரம் நசுக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்?












Click it and Unblock the Notifications