ஆப்கானிஸ்தானில் 3,000 லிட்டர் மதுபானத்தை கால்வாயில் கொட்டிய தாலிபன்கள்: மது விற்பனைக்கு எதிராக எச்சரிக்கை
சோதனையின்போது தாங்கள் கைப்பற்றிய 3,000 லிட்டர் மதுபானத்தை ஆப்கன் உளவுத்துறை முகவர்கள் காபூலில் உள்ள ஒரு கால்வாயில் கொட்டியதாக, ஏ.எப்.பி செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
தாலிபன் ஆட்சியில் மதுபான விற்பனையை ஒழிக்கும் வகையில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பின்னர், பீப்பாய்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 3,000 லிட்டர் மதுபானங்களை கால்வாயில் கொட்டியதாக, அந்நாட்டின் உளவுத்துறை பொது இயக்குநரகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
https://twitter.com/GDI1415/status/1477305279171682307
இது தொடர்பாக, உளவுத்துறை பொது இயக்குநரகம் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், அதன் முகவர்கள், தலைநகர் காபூலில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை கால்வாயில் கொட்டுவதைக் காண முடிகிறது.
- தாலிபன் ஆட்சியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் வர்த்தகம்
- ஆப்கானிஸ்தானைவிட்டு திடீரென வெளியேறியதற்கான காரணம் இதுதான்: அஷ்ரஃப் கனி விளக்கம்
"மதுபான உற்பத்தி மற்றும் அதனை விற்பனை செய்வதில் இருந்து முஸ்லிம்கள் தீவிரமாக ஒதுங்கி இருக்க வேண்டும்," என, அந்த வீடியோவில் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சோதனை எப்போது நடத்தப்பட்டது, எப்போது மதுபானங்கள் கால்வாயில் ஊற்றி அழிக்கப்பட்டது என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், இச்சம்பவம் தொடர்பாக மூன்று வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக, உளவுத்துறை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் மதுபான விற்பனை மற்றும் அதனை உட்கொள்ளுதல் இரண்டும் முந்தைய ஆட்சியிலும் தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால், இஸ்லாமிய முறைப்படி ஆட்சி நடத்திவரும் தாலிபன்கள் மது விற்பனையை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
- இந்தியாவுடன் மோதலை விரும்பவில்லை: தாலிபன் அமைச்சர் பிபிசிக்கு பேட்டி
- ஆப்கன் பெண்கள் நீண்ட தூரம் பயணிக்க ஆண் உறவினர் துணை அவசியம்: தாலிபன்
தாலிபன்கள் கடந்தாண்டு ஆகஸ்ட் 15 அன்று ஆப்கனை கைப்பற்றியதிலிருந்து, நாடு முழுவதும் மது விற்பனை, போதைக்கு அடிமையானவர்களைக் கண்டறிவது உள்ளிட்ட சோதனைகள் அதிகமாகியுள்ளன.
தாலிபன் அரசின் நன்னடத்தை மற்றும் தீமை தடுப்பு அமைச்சகம், பெண்களின் உரிமைகளை கட்டுப்படுத்தும் பல்வேறு அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது.
பிற செய்திகள்:
- 'அழிந்து போன' டெக்கீலா மீன் இனம் - மீண்டும் வந்த நம்பிக்கை கதை
- இலங்கையில் உணவு பற்றாக்குறை: குறையும் நெல் உற்பத்தி - அச்சுறுத்தும் விலையேற்றம்
- அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பல இடங்களின் பெயர்களை சீனா மாற்றுவது ஏன்?
- இந்த ஆண்டில் பகுத்தறிவோடு வாழ்வதற்கான மூன்று வழிகள் இதோ
- இலங்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் ஒமிக்ரான் - சமூகப் பரவலாக மாறிவிட்டதா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்
-
புர்ஜ் கலீஃபாவை தாக்கிய ஈரான்.. உலகின் மிக உயரமான கட்டிடத்தில் கிளம்பிய புகை! மக்கள் வெளியேற்றம் -
டேஞ்சர்.. சிவப்புக் கொடியை ஏற்றிய ஈரான்.. இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? -
கமேனி உயிரிழந்துவிட்டார்.. உறுதி செய்த ஈரான்.. அடுத்து கண்ட்ரோலை எடுக்க போவது யார்? முக்கிய தகவல் -
வாழ்வா சாவா போராட்டம்! ரஷ்யாவின் 'செக்'... சீனாவின் 'கேம்'! - ஈரானுக்காக களமிறங்கும் வல்லரசுகள்? -
கமேனி கொலை.. 3ம் உலகப்போரின் விதை.. ஈரான் உச்ச தலைவரை கொன்ற அமெரிக்கா, இஸ்ரேல்.. அடுத்து என்ன? -
ஈரானின் சுப்ரீம் லீடர் காமெனி படுகொலை? மொத்தம் 30 ஏவுகணைகள்! இஸ்ரேல் ஊடகம் சொன்ன தகவல்! -
திமுக விஸ்வரூபம் எடுத்துவிட்டது.. அதிமுக தலைவர்களை இணைப்பதன் பின்னணி இதுதான்.. பத்திரிகையாளர் மணி! -
விஜய் விவாகரத்து மோதல்.. 'ஆக்ரோஷ' சங்கீதா... பிரஸ் மீட்டில் வெடிக்கப்போகும் உண்மைகள்.. செம ட்விஸ்ட் -
Nanjil Sampath: விஜய் அனுபவம் குறைந்தவர்.. குறை உள்ளது.. நாஞ்சில் சம்பத் தடாலடி பேச்சு -
சிறகடிக்க ஆசை: ஹாஸ்பிடலில் அட்மிட்டான அண்ணாமலை.. விஜயா கொடுத்த அதிர்ச்சி! மீனா எடுத்த விபரீத முடிவு -
விஜய்க்கு பொண்டாட்டியாக இருப்போம்! கூச்சலிட்ட பெண், ஒரே வார்த்தையில் ப்ளூசட்டை மாறன் ஆதங்கம் -
தயவு செய்து பும்ராவுக்கு முதல் ஓவரை கொடுங்கள்.. இல்லனா வெஸ்ட் இண்டீஸ் வெற்றியை தடுக்க முடியாது!













Click it and Unblock the Notifications