Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரவோடு இரவாக.. மெஹ்பூபா முஃப்தி உள்பட பலருக்கு வீட்டு சிறை! பரபரக்கும் ஜம்மு காஷ்மீர்.. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்து இன்றுடன் 4 ஆண்டுகள் ஆகின்ற நிலையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முஃப்தி வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370ஐ கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பாஜக தலைமையிலான மத்திய அரசு திடீரென நீக்குவதாக அறிவித்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன.

After 4 years Jammu and Kashmirs special status has been revoked, former cm Mehbooba Mufti is under house arrest

இருப்பினும் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்னர் ஜம்மு காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். இப்படியாக இந்த சிறப்பு சட்டம் நீக்கப்பட்டு இன்றுடன் 4 ஆண்டுகள் ஆகிறது.

ஜம்மு காஷ்மீரில் மதம் சார்ந்த விழாக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், சினிமா தியேட்டர்கள் போன்றவை திறக்கப்பட்டுள்ளதால் இயல்புநிலை திரும்பியுள்ளதாக மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில்தான் தற்போது ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முஃப்தி வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "இன்று நான் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கிறேன். இதேபோல எங்கள் கட்சி நிர்வாகிகள் பலரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல கட்சியினர் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவையனைத்தும் நேற்று நள்ளிரவில் நடந்தது. மத்திய அரசு இங்கு இயல்பு நிலை இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் கூறியிருந்த நிலையில் தற்போது இந்த கைது நடவடிக்கை மத்திய அரசின் செயலை அம்பலப்படுத்தியுள்ளது.

ஸ்ரீநகர் முழுவதும் சட்ட விரோதமாக 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததை காஷ்மீர் மக்கள் 'கொண்டாட வேண்டும்' என்று பிரமாண்ட விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் மக்களின் உண்மையான உணர்வுகளை ஒடுக்க மிருகத்தனமான சக்தி பயன்படுத்தப்படுகிறது. தற்போது இது குறித்த விசாரணை உச்சநீதிமன்றத்திற்கு வந்திருக்கும் நிலையில், நீதிமன்றம் இந்த சம்பவங்களை கருத்தில் கொள்ளும் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் 4ம் ஆண்டு தினத்தை அனுசரிக்கும் வகையில் அமைதியான நிகழ்ச்சிக்கு அரசியல் கட்சிகள் அனுமதி கோரியிருந்தன. ஆனால் அனுமதி மறுத்ததாகவும் அதன் பின்னர்தான் கைது நடவடிக்கைகள் தொடங்கியதாகவும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும் தங்களது அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+