ஒரே அரிசி கடை- 20 முறை அட்டாக் செய்த 'படையப்பா'- மிரட்டும் 'மாங்கா கொம்பன்'- கேரளா யானைகளால் ஷாக்!
மூணாறு: கேரளாவில் அரிகொம்பன் யானையை தொடர்ந்து படையப்பா மற்றும் மாங்கா கொம்பன் யானைகள் குறித்த தகவல்கள் தலைப்புச் செய்திகளாக இடம்பிடித்து கொண்டிருக்கின்றன.
கேரளாவின் மூணாறு சின்னக்கானல் வனப்பகுதியை சேர்ந்த அரிகொம்பன் அல்லது அரிசி கொம்பன் யானை மூர்க்கமாக 10 பேரை மிதித்து கொன்றது. இதனைத் தொடர்ந்து நகர்வலம் வந்த அரிகொம்பன் பிடிக்கப்பட்டு கேரளா வனத்துறையினரால் தேக்கடி வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் கேரளா வனப்பகுதியில் இருந்து தமிழ்நாட்டுக்குள் அரிகொம்பன் ஊடுருவியது. தமிழ்நாட்டின் கம்பம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அரிகொம்பன் ஒரு வாரகாலமாக மக்களை அச்சுறுத்தி வந்தது. இதனால் 144 தடை உத்தரவு போடும் நிலை உருவானது. இதனையடுத்து ஒருவழியாக மயக்க ஊசி மூலம் பிடிக்கப்பட்ட அரிகொம்பன் யானை, களக்காடு வனப்பகுதிக்குள் விடப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மூணாறு சின்னக்கானல் மக்கள், தங்களது வனப்பகுதியிலேயே அரிகொம்பனை கொண்டு வந்துவிட கோரி போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக வழக்கும் கூட நடைபெற்றது.

படையப்பா: அரிகொம்பனைத் தொடர்ந்து படையப்பா யானை குறித்த தகவல்கள் இப்போது பேசுபொருளாகி இருக்கின்றன. கேரளாவின் மூணாறு சொக்கநாடு பகுதியில் முகாமிட்டிருக்கிறது படையப்பா யானை. இதனது ஒரே வேலை அப்பகுதியில் அரிசி கடையை உடைத்து உணவுப் பொருட்களை சாப்பிடுவதுதான். அதுவும் சொக்கநாடு உண்ணி மேரி என்பவரது அரிசி கடையைத்தான் படையப்பா யானை இலக்கு வைத்து தாக்குகிறதாம். இதுவரை 20 முறை உண்ணி மேரி கடையை பதம் பார்த்துவிட்டதாம் படையப்பா யானை.
மாங்கா கொம்பன்: அட்டப்பாடி சித்தூர் வனப்பகுதியில் இப்போது மாங்கா கொம்பன் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அதாவது அப்பகுதிக்கு வந்து போகும் யானை நாள்தோறும் மாம்பழ வேட்டை நடத்துவதால் மாங்கா கொம்பன் என பெயர் சூட்டியிருக்கின்றனர் பொதுமக்கள். அட்டப்பாடி சித்தூர் அருகே முகாமிட்டுள்ள மாங்கா கொம்பன் தொடர்பாக கேரளா வனத்துறைக்கு தகவல் தரப்பட்டுள்ளதாம். இப்போது படையப்பா மற்றும் மாங்கா கொம்பன் யானைகள்தான் கேரளா வனப்பகுதிகளில் ஹீரோக்களாக வலம் வருகின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications