கனவுக் கல்வியான ஐ.ஐ.டி.க்கு தேர்வான ஏழை சகோதரர்கள் மீது தாக்குதல்.. தலித் என்பதால்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் ஐஐடிக்கு தேர்வான தலித் வகுப்பைச் சேர்ந்த ஏழை மாணவர்களின் வீட்டின் மீது மர்மநபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்கள் பலரின் கனவுக்கல்வியாக விளங்குகிறது ஐ.ஐ.டி. இந்நிலையில், உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு ஏழை சகோதரர்களான ராஜூ (18) மற்றும் பிரிஜேஸ் (19) ஆகிய இருவரும் கடுமையாக படித்து, தடைகளைத் தாண்டி ஐஐடி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றனர்.

After Attack, Security for UP Brothers Who Cracked IIT

இம்மாணவர்களின் தந்தை தினக்கூலி. எனவே, ஐஐடியில் சேர பணமில்லாமல் தவித்த இந்த மாணவர்கலின், கல்விக் கட்டணத்தை அண்மையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சமீபத்தில் தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில், மாணவர்களின் முன்னேற்றத்தைப் பொறுத்துக் கொள்ள இயலாத சில மர்மநபர்கள், நேற்று அவர்களது வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், மாணவர்களின் வீட்டிற்கு பாதுகாப்பு அளித்துள்ளனர். மேலும், இத்தாக்குதல் சம்பவத்திற்கு காரணமானவர்களைத் தேடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+