ராகுல்... உங்க தாத்தா, பாட்டி, அப்பா இந்த நாட்டையே நாசமாக்கிவிட்டனர்: மோடி
ராய்கர்: ராகுல் காந்தியின் தாத்தா, பாட்டி, அப்பா ஆகியோர் இந்தியாவை நாசமாக்கிவிட்டனர் என்று குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி சாடியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் மாநிலம் ராய்கரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது மோடி பேசியதாவது:

நாட்டின் வளர்ச்சியையே விரும்புவதாக இளவரசர் ராகுல் சொல்கிறார். அப்படியானால் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசுகள் என்ன செய்து கொண்டிருந்தன? ராகுலின் தந்தை, பாட்டி என அனைவரும் தங்களது சுயநலத்துக்காக இந்த நாட்டை சீரழித்து விட்டனர்.
மாவோயிஸ்டுகளை ஒழிக்க பாரதிய ஜனதா பல்வேறு சட்டங்களை அமல்படுத்தியது. ஆனாங் காங்கிரஸ் அரசு அதை நடைமுறைப்படுத்தவில்லை.
நாட்டை விற்பவர்களை விட டீ விற்பவர் மேல்தான். டீ அடித்தவர்கள் எல்லாம் நாட்டின் பிரதமர் ஆக முடியுமா என்கிறது சமாஜ்வாடி கட்சி. இது ஏழைகளை வேதனைப்படுத்துவதாகும்.
காங்கிரஸ் அரசுக்கு தோல்வி பயம் உருவாகிவிட்டது. காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலையை தடுத்து நிறுத்த முடியாது.
மோடி பேசுவதையே கண்காணித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். காங்கிரஸிடம் இருந்து இந்த நாட்டை விடுவிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications