நிலக்கரி ஊழல் வழக்கு: மன்மோகன்சிங் ரொம்ப நல்லவர்- சோனியா சர்ட்டிபிகேட்! ஆதரவு பேரணி!!
நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் சம்மன் அனுப்பிய விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன்சிங் மிகவும் நல்லவர்.. உண்மையை நிரூபிப்பார் என்று நற்சான்றிதழ் கொடுத்திருக்கிறார்.
நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இருப்பதாக கருதி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தொழில் அதிபர் குமார் மங்கலம் பிர்லா, நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் பி.சி.பரேக், ஹிண்டால்கோ நிறுவனம், அதன் அதிகாரிகள் சுபேந்து அமிதாப், டி.பட்டாச்சார்யா ஆகியோர் அடுத்த மாதம் 8-ந் தேதி நேரில் ஆஜராக டெல்லி சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டு இருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழலில் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளதின் மூலம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முதல் முறையாக நீதிமன்றப் படியேறி, குற்றவாளி கூண்டில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
இருப்பினும் இவ்விவகாரத்தில் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்த, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வீடு நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களுடன் கட்சியின் மூத்த தலைவர்களும் உடன் இருந்தனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து மன்மோகன் சிங் வீடுவரையில் அவர்கள் பேரணியாக சென்றனர்.
பின்னர் பேசிய சோனியா, டாக்டர் மன்மோகன் சிங் அவருடைய நேர்மைக்காக இந்தியா மட்டுமின்றி உலக முழுவதும் அறியப்பட்டவர். நாங்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாக உள்ளோம். இவ்விவகாரத்தில் நாங்கள் சட்டரீதியாக போராடுவோம். அவர் நிரூபிப்பார் என்று நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்றார்,
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications