கட்டில், பீரோ, விசில்.. ஆர்.கே.நகரில் இப்படி ஒரு சின்னத்தில்தான் சசி, ஓ.பி.எஸ் அணி போட்டியிடனும்!
சுயேச்சைகளுக்கு ஒதுக்கப்படும் சின்னம்தான், டிடிவி தினகரன், மதுசூதனன் ஆகியோருக்கும் வழங்கப்படும். ஏதாவது ஒரு சின்னத்தை தேர்ந்தெடுத்து போட்டியிடலாம்.
டெல்லி: அதிமுக கட்சி சின்னமான இரட்டை இலை முடக்கப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா அணியினர் உரிமை கொண்டாடியதால் யாருக்குமே இல்லாமல் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தலில் இவ்விரு தரப்பு வேட்பாளர்களும் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த முடியாது என்பதால் வேறு ஏதாவது ஒரு பொது சின்னத்தை பயன்படுத்த வேண்டும்.
சுயேச்சைகளுக்கு ஒதுக்கப்படும் சின்னம்தான், டிடிவி தினகரன், மதுசூதனன் ஆகியோருக்கும் வழங்கப்படும். கட்டில், பீரோ, கிரிக்கெட் பேட், விசில், தொப்பி இப்படி ஏதாவது ஒரு சின்னத்தை தேர்ந்தெடுத்து போட்டியிடலாம்.
இந்த சின்னங்களின் பட்டியல் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், சுயேச்சைகளும் குறிப்பிட்ட சின்னத்திற்கு உரிமை கோரினால், அப்போது குலுக்கல் முறையில்தான் சின்னம் ஒதுக்கப்படுமாம். பாவம்தான், பன்னீர், சசி அணி நிலை.