“வாழ்க்கையை வெறுக்கிறேன் நான்”- பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டு விட்டு உயிரை விட்ட இளம்பெண்
இந்தூர்: பேஸ்புக்கில் "ஐ ஹேட் லைப்" என்ற கடைசி போஸ்ட்டுக்கு பின் ஒரு பெண் தற்கொலை செய்து வாழ்க்கையை முடித்து கொண்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
பத்து நாட்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் "நான் வாழ்க்கையை வெறுக்கிறேன்" என்ற படத்தை பகிர்ந்து கொண்ட 25 வயதான அந்த பெண்,அதன்பின் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆர்த்தி ஸ்ரீவாஸ் என்ற அந்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.அவருடைய அந்த படத்தை லைக் செய்தவர்களில் அவருடைய தாயார் மம்தாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய குடும்பத்தினர் வீட்டில் இல்லாத நேரத்தில் இந்த முடிவை தேடிக்கொண்டுள்ளார் இவர்.
ஒரு மாதத்திற்கு முன்பு இவர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.இவருடைய தந்தை நான்கு வருடத்திற்கு முன்பே இறந்துவிட்ட நிலையில் இவரது தாயார் தந்தையின் வேலையில் மனிதாபிமான அடிப்படையில் அமர்ந்தார்.
இப்படத்தை ஆர்த்தியின் நண்பர்கள் அகற்ற சொல்லி கூறியுள்ளனர்.ஆனாலும்,இவரது குடும்பத்தினர் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
காவல்துறை இந்த தற்கொலையைப்பற்றி விசாரித்து வருகிறது.அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இதைப்பற்றிய எந்த அறிகுறியும் இல்லை.அவருடைய பணி இடத்தில் ஏதேனும் நிகழ்ந்திருக்குமா என விசாரித்து வருகின்றனர்.
இதைப் பற்றி உளவியல் நிபுணர் ஒருவர் ," பேஸ்புக் என்பது தற்போது இளைய தலைமுறையினர் தங்களது மனநினைவுகள் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் இடமாக இருக்கிறது.எனவே உங்களது குழந்தைகளின் செயல்பாடுகளை உற்றுக் கவனியுங்கள்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications