முன்னறிவிப்பின்றி மூடப்பட்டது 'டோரண்ட்'... திருட்டுத்தனமான டவுண்லோடுக்கு ஆப்பு!
டெல்லி: இணையதளத்தில் உலாவும் நபர்கள் அதிகம் பயன்படுத்தும் டோரண்ட் இணையதளம் எந்தவித முன்னறிவிப்புமின்றி மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் Kickass Torrents எனும் உலகின் மிகப் பெரிய தகவல் திருட்டு இணையதளம் அமெரிக்க புலணாய்வு அமைப்பு மூலம் முடக்கப்பட்டது. மேலும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அதன் உரிமையாளர் ஆர்டம் வாலின் என்பவர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து தேடுதல் இணையதளமான டோரண்ட் தற்போது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்டுள்ளது.

கிக்காஸ் டோரண்ட் (Kickass Torreents) இணையதளம் 100 கோடி டாலர் மதிப்புள்ள படங்கள், இசை ஆல்பங்கள் உள்ளிட்ட தகவல்களை திருடுவதாக புகார் எழுந்தது, இதையடுத்து அதன் உரிமையாளர் போலந்தில் கைது செய்யப்பட்டார். தொடர்ச்சியாக பார்க்கும் இணையதளங்களில் கிக்காஸ் இணையதளம் 69-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2003-ம் ஆண்டு தொடங்கப்பட்டது டோரண்ட்ஸ் Torrentz.eu.தினமும் லட்சக்கணக்கானோர் அந்த இணையதளத்தை பயன்படுத்தி வந்த நிலையில், எந்தவித முன்னறிவிப்புமின்றி இணையதளம் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அந்த இணையதளத்தில் தேடினால் எவ்வித லிங்க்கும் (link) அதில் தோன்றுவதில்லை.












Click it and Unblock the Notifications