அடுத்தடுத்து புரட்சி செய்யும் காங்கிரஸ்.. ம.பி.யை தொடர்ந்து சத்தீஸ்கரிலும் விவசாயக் கடன் தள்ளுபடி!
Recommended Video

ராய்ப்பூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று முதல்வராக பொறுப்பேற்ற கமல்நாத் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தார். இதே போல் சத்தீஸ்கர் மாநில முதல்வராக பதவியேற்ற கையோடு பூபேஷ் பாகலும் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தார்.
தமிழகம் போல் பிற மாநிலங்களிலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என லட்சக்கணக்கான விவசாயிகள் அவ்வப்போது டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் தனியாகவும், பிற மாநில விவசாயிகளுடனும் போராட்டம் நடத்துகின்றனர்.
எனினும் மத்தியில் ஆளும் பாஜக அரசோ விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என கூறிவிட்டது. இதனால் விவசாயிகள் சொல்லொண்ணா துயரில் உள்ளனர். சிலர் விவசாயத்துக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

காங்கிரஸ்
இத்தகைய போராட்டங்கள் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இதையடுத்து ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெற்றது.

கடன் தள்ளுபடி
இதையடுத்து மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய முதல்வர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். இதில் மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வரான கமல்நாத் பதவியேற்ற கையுடன் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

புரட்சி
அதுபோல் சத்தீஸ்கர் மாநிலத்திலும் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது போல் அடுத்தடுத்த புரட்சி ராஜஸ்தானில் எப்போது வரும் என அம்மாநில விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

விவசாயிகள் எதிர்பார்ப்பு
இந்த நிலையில் தமிழகத்தில் கஜா புயல், கடும் வறட்சி, பயிர்களுக்கு உரிய விலை கிடைக்காதது, பயிர்கள் விலை போகாதது உள்ளிட்ட பிரச்சினைகளால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். எனவே காங்கிரஸ் பொறுப்பேற்ற மாநிலங்களில் விவசாய கடன் தள்ளுபடி செய்தது போல் தமிழக அரசும் செய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications