முகேஷ் அம்பானிக்கு 'இசட்', அவர் மனைவி நீத்தாவுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளித்த அரசு தற்போது அவரின் மனைவி நீத்தாவுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க உள்ளது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கியது. தனக்கு பாதுகாப்பு அளிக்கும் வீரர்களுக்கு முகேஷ் அம்பானி பணம் அளித்து வருகிறார்.

இந்நிலையில் அவரின் மனைவிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

நீத்தா அம்பானி

நீத்தா அம்பானி

நீத்தா அம்பானியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய பாதுகாப்பு ஏஜென்சீக்கள் அறிக்கை அளித்ததால் அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

முகேஷ்

முகேஷ்

முகேஷ் அம்பானியை பாதுகாக்கும் பணியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் ஈடுபட்டுள்ளனர். அரசு விவிஐபிகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை பெறும் ஒரே தனியார் நிறுவன தம்பதி முகேஷ் மற்றும் நீத்தா தான்.

10 பேர்

10 பேர்

முகேஷ் எப்படி தனக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு அரசுக்கு பணம் அளிக்கிறாரோ அதே போன்று நீத்தாவின் பாதுகாப்புக்கும் பணம் கொடுக்க உள்ளார். 10 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் நீத்தாவுக்கு பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.

2013ம் ஆண்டு

2013ம் ஆண்டு

2013ம் ஆண்டு முதல் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் முகேஷ் அம்பானியை பாதுகாத்து வருகிறார்கள். 40 கமாண்டோக்களை கொண்ட இசட் பிளஸ் பாதுகாப்பை அடுத்தபடியாக உள்ளது இசட் பாதுகாப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+