டிரோன் வெடிகுண்டு வீச்சு.. ராக்கெட் தாக்குதல்.. பற்றி எரியும் மணிப்பூர். மீண்டும் பள்ளிகள் மூடல்!
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாத குழுக்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்த நிலையில் அம்மாநிலத்தில் பள்ளிகள் அனைத்தும் இன்றும் நாளையும் மூடப்பட்டுள்ளன. டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியதால் மணிப்பூரில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் மாரெம்பம் கொய்ரெங் வீடுதான் ராக்கெட் தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தினர்.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மைத்தேயி- குக்கி இனக்குழுக்களிடையேயான வன்முறை தொடர்ந்து வருகிறது. அத்துடன் பாதுகாப்பு படையினர் மீதும் குக்கி இனக்குழுவினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மைத்தேயி இனக்குழுவினரை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்க மாநில அரசு முயற்சித்ததற்கு குக்கி இனமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததில் தொடங்கியது மோதல். இதுவரையிலான வன்முறைகளில் 300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.
தற்போது குக்கி இனக்குழுவினர் தாங்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து தனி நிர்வாக அமைப்பை உருவாக்க கோருகின்றனர். இதற்கு மைத்தேயி, நாகா இனக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களான பெரும் வன்முறைகள் நிகழாமல் இருந்தன.
இந்த நிலையில் திடீரென மணிப்பூரில் வன்முறை மீண்டும் தலைதூக்கி உள்ளது. குக்கி இனக்குழுவினர் டிரோன்கள் மூலம் வெடிகுண்டு வீச்சு தாக்குதல்களை நடத்தி இருந்தனர். இதனைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் மாரெம்பம் கொய்ரெங் வீடு மீது ராக்கெட்டுகளை வீசியும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இது பாதுகாப்புத் தரப்பினரை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த சில நாட்களிலான மோதல்களில் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூரில் தொடர்ந்து வன்முறைகள் நீடிப்பதால் ஏற்கனவே பள்ளிகள் செப்டமர் 7-ந் தேதி வரை மூடப்பட்டிருந்தன. தற்போதும் அதே நிலைமை நீடிப்பதால் மணிப்பூர் மாநிலம் முழுவதும் இன்றும் நாளையும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
மணிப்பூர் தீவிரவாத குழுக்களிடம் யுத்தங்களில் பயன்படுத்தப்படும் ராக்கெட் லாஞ்சர்கள், டிரோன்கள் இருப்பது தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் அன்னிய சக்திகள்தான் மணிப்பூரில் வன்முறைகளை ஊக்குவிக்க ஆயுதங்களை வாரி வழங்குவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications