20 நாட்கள் சிகிச்சைக்குப் பின்... மருத்துவமனையில் இருந்து சுஷ்மா டிஸ்சார்ஜ்
டெல்லி: நெஞ்சுவலி காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு கடந்தமாதம் 25ம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவருக்கு சிறப்பு நிபுணர்கள் பல்வேறு சோதனைகளை எடுத்தனர்.

அப்போது, அவருக்கு நெஞ்சு எரிச்சலுடன், நிமோனியா காய்ச்சலுக்கான அறிகுறியும் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சுஷ்மா சுவராஜ் இதய நரம்பியல் சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
தொடர்ந்து 20 நாட்களாக சுஷ்மாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன்பலனாக சுஷ்மாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், சுஷ்மா பூரணமாக குணமடைந்ததை அடுத்து, இன்று அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சுஷ்மாவை பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications