அமெரிக்கா நெருக்கடியால் குடியரசு தின அணிவகுப்பில் அணுஆயுத ஏவுகணைகள் இடம் பெறவில்லை?
டெல்லி: அமெரிக்காவின் நெருக்கடியால் குடியரசு தின அணிவகுப்பில் நாட்டின் அணு ஆயுத ஏவுகணைகள் இடம்பெறவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாட்டின் 66-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அமெரிக்கா அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கடந்த கால டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் வாய்ந்த அக்னி, தனுஷ், ஆகாஷ் மற்றும் பிரமோஸ் உள்ளிட்ட ஏவுகணைகள் இடம் பெற்றிருக்கும். ஆனால் நேற்றைய அணிவகுப்பில் இந்த ஏவுகணைகள் இடம் பெறவில்லை.
இதற்கு அமெரிக்காவின் நெருக்கடிதான் காரணமா? என்ற கேள்விக்கு ‘இதில் சிறிது உண்மை இருக்கிறது" என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது இந்த ஏவுகணைகள் இடம் பெற்றால் ஒபாமாவுக்கு அசவுகரியமாக இருக்கலாம் என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் சிதான்சு கர் கூறுகையில், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணைகள் அனைத்தும் கடந்த காலங்களில் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றை உலகமும் பார்த்துள்ளது. இவை இல்லாத அணிவகுப்பையும் குறைத்து மதிப்பிட முடியாது என்றார்.
அணிவகுப்பில் அணு ஆயுத ஏவுகணைகள் இடம்பெற்றால், இந்தியாவை அணு ஆயுத நாடாக அமெரிக்கா அங்கீகரித்ததாக ஆகிவிடும் என எண்ணியே, அமெரிக்கா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என பாதுகாப்புத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications