ஆக்ராவில் 6 வயது சிறுமியை உயிருடன் புதைத்த சித்தி

Subscribe to Oneindia Tamil

ஆக்ரா: உத்தர பிரதேசத்தில் 6 வயது சிறுமியை அதன் சித்தி உயிருடன் புதைத்த கொடுமை நடந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் அர்ச்சனா(22). அவருக்கும் கோவில் பூசாரி ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது. பூசாரிக்கு மூத்த மனைவி மூலம் 6 வயதில் மகள் இருந்தார். அர்ச்சனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு அர்ச்சனாவுக்கு சிறுமியை பிடிக்காமல் போனது.

தனது கணவர் சம்பாதிக்கும் கொஞ்ச பணமும் சிறுமியின் படிப்பு, பின்னர் திருமணத்திற்கு செலவாகிவிட்டால் தனது மகனுக்கு ஒன்றும் கிடைக்காது என்று நினைத்தார் அர்ச்சனா. இதையடுத்து அவர் சிறுமியை ஒழித்துக்கட்ட முடிவு செய்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் சிறுமியை கோவிலுக்கு அழைத்துச் சென்று அவரது வாயில் துணியைத் திணித்து குழி தோண்டி உயிருடன் புதைத்துவிட்டார். வீட்டுக்கு வந்த அர்ச்சனா சிறுமியை காணவில்லை என்று கணவரிடம் தெரிவித்தார்.

அர்ச்சனா தனது உறவுக்கார பெண்ணிடம் நடந்ததை தெரிவிக்க அவர் போலீசாரிடம் கொலையை பற்றி கூறினார். போலீசார் வந்து விசாரித்தபோது அர்ச்சனா சிறுமியை புதைத்த இடத்தை காண்பித்தார். சிறுமியின் உடலை போலீசார் தோண்டி எடுத்தனர். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் அர்ச்சனாவை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+