ஆக்ராவில் இளம்பெண் தற்கொலை... தனது சாவை மொபைல் கேமராவில் பதிவு செய்தார்
ஆக்ரா: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் தனது மொபைல் ஃபோனில் மரண
வாக்குமூலத்தை பதிவுசெய்து அவர் துடிதுடித்து சாகும் காட்சியையும் வீடியோவாக எடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேஹா யாதவ் (27) என்ற அந்தப்பெண், ஆக்ராவிலுள்ள லால்பாக் எனுமிடத்தில் வசித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது கணவருக்கு போன்செய்த அவர், இனிமேல் நீங்கள் என்னைப் பார்க்கவே முடியாது, இது தான் உங்களிடம் நான் கடைசியாக பேசுவது என்று கூறியுள்ளார். அதனைக் கேட்ட யாடேஷ் யாதவ் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக கிளம்பி வீட்டுக்கு வந்தார். ஆனால் அதற்குள் நேஹா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
அவரது தற்கொலைக்கான காரணத்தை ஒரு கடிதத்தில் எழுதி வைத்த நேஹா, அவரது மரண வாக்குமூலத்தையும் தனது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்தார்.
நேஹாவின் வாக்குமூலமும், தூக்கில் தொங்கி உயிரிழக்கும் வீடியோ காட்சியும் பதிவாகி இருந்ததை கண்ட யாடேஷ் யாதவ், அந்த செல்போனையும், கடிதத்தையும் அங்கிருந்து எடுத்துகொண்டு யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்து வெளியேறினார்.
இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். நேஹாவின் உடலைக் கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, போலீசாரிடம் பேசிய யாடேஷ் யாதவ், நேஹாவின் மரணத்துக்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை. நேஹா அவரது பெற்றோரின் புறக்கணிப்புக்கு உள்ளானதால்தான் இந்த தற்கொலை முடிவை தேர்ந்தெடுத்ததாகக் கூறினார்.
மேலும், நேஹாவின் அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். நேஹா இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர். அதனால் முதல் மனைவியின் குடும்பத்தினர் அவரை தொடர்ந்து உதாசினப்படுத்தி வந்தனர். இதனால் நேஹா மிகுந்த மன உளைச்சளுக்க்கு உள்ளானார். நேஹாவின் மரணத்துக்கு அவர்கள்தான் காரணம். நான் விரைவில் அவர்கள் மீது புகார் கொடுப்பேன் என்றார்.
இது குறித்து வழக்கை விசாரித்துவரும் போலீஸ் அதிகாரி அஸ்தானா கூறுகையில்,
நேஹாவின் குரல் வாக்குமூலத்தை யாடேஷ் ‘வாட்ஸ்அப்' மூலமாக போலீசாருக்கு அனுப்பியுள்ளார். எனினும், அவர் சரணடைந்து நேஹாவின் செல்போனை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.அதன்பின்னரே, இவ்வழக்கில் இறுதிமுடிவு எடுக்க முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications