ஆளுநர் மீது புகார்.. நாடாளுமன்றத்தில் கொந்தளித்த அதிமுக.. இரு அவைகளும் ஒத்திவைப்பு!
சசிகலாவை ஆட்சி அமைக்க அழைப்பதில் ஆளுநர் தாமதம் செய்வதாகக் கூறி அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.
டெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைப்பதில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தாமதம் செய்து வருவதாக புகார் கூறி அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுப்பட்டனர்.
அதிமுகவின் பொதுச் செயலாளராக உள்ள சசிகலா, சட்டசபைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு கடந்த 7ம் தேதி அவர் முதல்வராக பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழகத்தில் இல்லாததால் அவர் பொறுப்பேற்பது தள்ளிப் போனது.

இதனிடையே, தற்போது முதல்வராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம், தான் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டேன் என்று பகீர் உண்மையை உலகிற்கு அறிவித்தார். இதனையடுத்து சசிகலா முதல்வராக பொறுப்பேற்பதில் அடுக்கடுக்கான பிரச்சனைகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், இன்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, சசிகலாவை ஆட்சி அமைக்க அழைப்பதில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தாமதம் செய்வதாக எம்பிக்கள் புகார் கூறினார்கள். அதிமுக எம்பிக்களின் தொடர் அமளியால் இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
-
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்! -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications