வாஜ்பாய் உடல் நிலை.. 2வது அறிக்கை இன்னும் சில நிமிடங்களில் வெளியாகிறது
Recommended Video

டெல்லி: வாஜ்பாய் கவலைக்கிடமாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் மற்றொரு அறிக்கையை வெளியிடப் போவதாக தகவல்கள் கூறுகின்றன.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த 9 வாரங்களாக , அதாவது ஜூலை 11-ஆம் தேதி முதல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலை நேற்று தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால் உயிர் காக்கும் உபகரணங்களின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியாகியுள்ளது.
இதையடுத்து வாஜ்பாய் நலம் பெற அரசியல் கட்சி தலைவர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் அறிக்கை இன்னும் சில நிமிடங்களில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று காலை 10.30 மணிக்கு ஒரு அறிக்கை வெளியான நிலையில் மற்றொரு அறிக்கை வெளியாகவுள்ளதால் பாஜக தொண்டர்கள் சோகத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications