ஜூலை 25ல் மருத்துவ நுழைவு மறுதேர்வு - சிபிஎஸ்இ அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுகள் ஜூலை 25ல் நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற மருத்துவ நுழைவுத் தேர்வில், வினாத்தானள் முன்கூட்டியே வெளியானதால் ஏற்கனவே நடந்த நுழைவுத் தேர்வை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
மேலும், மறு நுழைவுத் தேர்வை 4 வாரத்தில் நடத்த உச்ச நீதிமன்றம் சிபிஎஸ்சிக்கு உத்தரவிட்டிருந்தது.ஆனால், 4 வாரத்துக்குள் மறு தேர்வு நடத்த இயலாது எனவும், கால அவகாசம் வழங்கக் கோரியும் சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆகஸ்ட் 17ம் தேதிக்குள் நுழைவுத் தேர்வை நடத்தி முடித்து தேர்வு முடிவை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் வருகின்ற ஜூலை 25ம் தேதியன்று மறுதேர்வு நடைபெறும் என்று சிபிஎஸ்இ இன்று அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications