புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் விமானப் படை.. எல்லையில் போருக்கு தயாராகும் இந்தியா!
Recommended Video

ஜெய்ப்பூர்: புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காக விமான படை இந்திய- பாகிஸ்தான் எல்லையில் போருக்கு தயாராகி வருகிறது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமாவில் 70-க்கும் மேற்பட்ட வாகனங்களில் 2500 வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக 350 கிலோ வெடிப்பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த தீவிரவாதி கான்வாய் வாகனங்களின் மீது மோதி வெடிக்க செய்தார்.
இதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதனால் இந்தியாவே சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்த நிலையில் தீவிரவாத தாக்குதலால் பெரும் இழப்பை இந்தியா சந்தித்துள்ளதால் பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இரவு பகல்
இந்த நிலையில் பாகிஸ்தானையொட்டி ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் விமான படை சார்பில் மிகப் பெரிய போர் ஒத்திகை நிகழ்த்தப்பட்டது. இந்த ஒத்திகையில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என இரவு பகலாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

140 விமானங்கள்
இந்த ஒத்திகையில் ஈடுபட்ட மொத்தம் 140 விமானங்களும் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடியவை. அத்துடன் தரையிலிருந்து வான் நோக்கி தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையும், வானில் இருந்து வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் சோதனைகளும் நிகழ்த்தப்பட்டது.

விமான படை
ராணுவத் தளபதி பிபின் ராவத் மற்றும் உயர் அதிகாரிகளும் இந்த ஒத்திகையில் பங்கேற்றனர். இதுகுறித்து விமான படை மார்ஷல் பிஎஸ் தோனோ கூறுகையில் அரசியல் தலைவர்கள் கூறியபடி தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கும் வகையில் விமான படை தயாராகி வருகிறது என்றார்.

இந்தியா திட்டம்
வாயு சக்தி என்ற ஒத்திகை நிகழ்ச்சி இரவு பகலாக நடைபெற்ற வந்த போதிலும், இந்த போர் ஒத்திகை புல்வாமா தாக்குதலுக்கா இல்லை பாகிஸ்தானுக்கா என்பதை குறிப்பிடவில்லை. இதை பார்க்கும் போது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு பழித் தீர்க்க இந்தியா திட்டமிட்டுள்ளது என்பது நன்றாக தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications