ட்ரீம்லைனர் பஞ்சாயத்து இன்னும் தீரலை... நடு வானில் உடைந்த 'வின்ட்ஷீல்ட்'!
டெல்லி: போயிங் ட்ரீம்லைனர் விமானத்தில் தொடர்கிறது தொழில்நுட்பப் பஞ்சாயத்து. 250 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் கிளம்பிய ட்ரீம்லைனர் விமானத்தில், நடு வானில் அதன் முன்பக்க கண்ணாடி (வின்ட்ஷீல்ட்) உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பிராங்பர்ட்டிலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட சில நிமிடங்களில் ஏர் இந்தியாவின் இந்த ட்ரீம்லைனரில் இந்த உடைப்பு நடந்தது. விமானம் கிளம்பிய சிறிது நிமிடங்களிலேயே இது நடந்ததால் அதிர்ஷ்டவசமாக பேராபத்து தவிர்க்கப்பட்டது.

இதையடுத்து உடனடியாக பிராங்க்பர்ட்டுக்கே விமானத்தை கொண்டு வந்து தரையிறக்கினர். மே 9ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அன்று 241 பயணிகள் மற்றும் 10 ஊழியர்களுடன் விமானம் டெல்லிக்குப் புறப்பட்டது.
விமானம் மேலே எழுந்த சில நிமிடங்களிலேயே வின்ட்ஷீல்ட் ஒன்று உடைந்தது. இதையடுத்து விமானத்தை விமானி மீண்டும் பிராங்க்பர்ட் விமான நிலையத்திலேயே தரையிறக்கினார். யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
கடந்த 6 மாதங்களில் ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானத்தில் வின்ட்ஷீல்ட் உடைந்தது 2வது முறையாகும் இது. கடந்த நவம்பர் மாதத்திலும் இதேபோலத்தான் டெல்லி -மெல்போர்ன் இடையிலான ஏர் இந்தியா விமானத்தில் வின்ட்ஷீல்ட் உடைந்தது.
இதுவரைக்கும் ஏர் இந்தியா விமானத்தில் இதேபோல 5 முறை வின்ட்ஷீல்ட் உடைந்த சம்பவங்கள் நடந்துள்ளதாக ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். இதுகுறித்து போயிங் நிறுவனத்தை ஏர் இந்தியா தொடர்பு கொண்டுள்ளதாம். புதிய விமானங்களில் வின்ட்ஷீல்ட் உடைவது என்பது அரிதும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
சமச்சீரில்லாத வெப்ப நிலை அல்லது ஏதாவது மோதுவது போன்ற காரணத்தால் பொதுவாக வின்ட்ஷீல்ட் உடையுமாம். ஆனால் அது பழைய விமானத்தில்தான் அதிகம் நடக்கும். புதிய விமானத்தில் இப்படி ஏற்படுவது அரிது என்கிறார்கள்.
இதற்கிடையே பாரீஸ் விமானத்தில் ஒரு ட்ரீம்லைனர் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறக்கிய சம்பவமும் நடந்துள்ளது.
உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம் என்ற பெருமை படைத்த ட்ரீம்லைனர் விமானங்கள் அடிக்கடி இதுபோன்ற தொழில்நுட்பக் கோளாறுகளில் சிக்கி வருவது தொடர் கதையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications