25 கி.மீ வித்தியாசத்தில் ஏவுகணைத் தாக்குதலிலிருந்து தப்பிய ஏர் இந்தியா, சிங்கப்பூர் விமானங்கள்!
டெல்லி: உக்ரைனில் கிளர்ச்சியாளர்களால் ஏவுகணை வீசித் தகர்க்கப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸின் எம்எச் 17 விமானத்திற்கு 25 கிலோமீட்டடர் தொலைவில் பின்தங்கி வந்தது, ஏர் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் பேராபத்திலிருந்து தப்பியுள்ளன.
இந்த விமானங்களுக்கு முன்பாகப் போய் மலேசிய விமானம் சிக்கிக் கொண்டது தற்போது தெரிய வந்துள்ளது.
உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்துக்கும், இந்த இரு விமானங்களுக்கும் இடையே வெறும் 25 கிலோமீட்டர் இடைவெளிதான் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிளைட்ரேடார் 24 தரும் தகவல்
24 மணி நேர உலகளாவிய விமானக் கண்காணிப்பு சேவை, அதாவது பிளைட்ரேடார் 24 என்ற அமைப்பு கொடுத்துள்ள தகவலில் இது தெரிய வந்துள்ளது.

போயிங் விமானங்கள்
ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானமும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் போயிங் 777 விமானமும் உக்ரைனில் தாக்குதல் நடந்த இடத்திலிருந்து சம்பவ சமயத்தின்போது 25 கிலோமீ்ட்டர் தொலைவில் இருந்துள்ளதாக பிளைட்ரேடார் கூறியுள்ளது.

ஆபத்தைத் தவிர்ப்போம்
உக்ரைன் போன்ற போர் நடைபெறும் பகுதிகளின் வான்பகுதியைப் பயன்படுத்துவதை ஏர் இந்தியா எப்போதுமே தவிர்க்கும். இதுதொடர்பான அனைத்து எச்சரிக்கைச் செய்திகளையும் ஏர் இந்தியா கவனத்தில் கொள்ளும் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பாவுக்குச் செல்லும்போது
மேலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல பல்வேறு வழிகள் இருப்பதால் பிரச்சினை இல்லாத மார்க்கங்களில் செல்லும்படி ஏர் இந்தியா பைலட்டுகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் ஏர் இந்தியா கூறியுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications