3வது மாடியிலிருந்து கீழே விழுந்து விமான பணிப்பெண் சாவு.. காரணம் என்ன?
கொல்கத்தா: விமான பணிப்பெண் கொல்கத்தா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேகாலயா மாநில தலைநகரான ஷில்லாங்கை சேர்தவர் 23 வயதாகும் கோங்கிஸ்ட் கிளாரா பன்ஷா ராய் கிளாரா. இன்டிகோ விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக வேலை பார்த்து வருகிறார்.
கொல்கத்தா நகரின் கேஷ்டோபூர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 3வது மாடியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் இவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த தகவலை சிலர் போலீசாருக்கு கொடுத்துள்ளனர்.
போலீசார் அவர் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்றபோது அவருடன் ஒரு ஆணும், பெண்ணும் தங்கியிருந்தது தெரியவந்தது. ஆனால் அவர்களுக்கு பன்ஷா ராய் கிளாரா எப்போது வெளியே போனார் என்பது தெரியவில்லை என வாக்குமூலம் அளித்துள்ளனர்.
Year-Old #Airhostess Falls From 4th Floor In #Kolkata: https://t.co/mJsMJ33LWY, https://t.co/UBgT5aGUxI pic.twitter.com/XXNFKYeV2s
— Travel + Adventure (@TravelNewsBit) August 16, 2017
எனவே இது தற்கொலையா, விபத்தா அல்லது கொலையா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.