உ.பி.,யில் மாயாவதியுடன் கைகோர்க்கத் தயாராகும் அகிலேஷ்
உ.பி.யில் பாஜக ஆட்சிக்கு வராமல் தடுக்க மாயாவதியுடன் கைகோர்க்கத் தயாராக இருப்பதாக அகிலேஷ்சிங் யாதவ் கூறியுள்ளார்.
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியுடன் கூட்டணி சேர தயாராக இருப்பதாக அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அதிரடியாக அறிவித்துள்ளது அக்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டமாக நடைபெற்றன. நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான சமாஜ் வாதி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.

தற்போது வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகள் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கின்றன.
நியூஸ் எக்ஸ்- எம்.ஆர்.சி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜக அதிகபட்சம் 185 இடங்களை கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் சமாஜ்வாதி கட்சி- காங்கிரஸ் கூட்டணிக்கு 120 இடங்களும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 90 இடங்களும் கிடைக்கும் என்கிறது இந்த கருத்து கணிப்பு முடிவு. இருப்பினும் தொங்கு சட்டசபையே அமையும் சூழல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் பகுஜன் சமாஜ் வாதியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை தக்க வைக்க சமாஜ் வாதி கட்சி திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து உ.பி.மாநில முதல்வர் அகிலேஷ் கூறுகையில், சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் பகுஜன் சமாஜ் வாதி கட்சியுடன் கூட்டணி சேர தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏனெனில், குடியரசு தலைவர் ஆட்சி எனும் பெயரில் உபி மத்தியில் உள்ள பாஜகவின் மறைமுகப் பிடியில் சிக்குவதை எவரும் விரும்பவில்லை என்றார். ஆனால் அகிலேஷ் யாதவின் இந்த அழைப்பை மாயாவதி நிராகரித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எது எப்படியோ யார் ஆட்சியை பிடிக்கப் போகிறார்கள் என்பது நாளை ஓட்டு எண்ணிக்கையில் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications