வேலைக்காரரை நீக்கியதற்காக நடிகருக்கு கொலை மிரட்டல்: போலீஸ் விசாரணை

Subscribe to Oneindia Tamil

மும்பை: வேலைக்காரரை நீக்கியதற்காக ஹிந்தி நடிகர் அக்‌ஷய்குமாருக்குக் கொலை மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல ஹிந்தி நடிகர் அக்‌ஷய்குமார். இவர் ஆரம்பத்தில் பல தோல்விகளைச் சந்தித்த போதும், தற்போது அடுத்தடுத்து பல ஹிட் படங்களைத் தந்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், தனக்கு கொலைமிரட்டல் விடுத்து மர்ம அழைப்பு வந்துள்ளதாக அக்‌ஷய்குமார் ஜுஹூ போலீசில் புகார் அளித்துள்ளார்.

பணி நீக்கம்...

பணி நீக்கம்...

சமீபத்தில் அக்‌ஷய்குமார் வீட்டில் வேலை பார்த்த வேலைக்காரர் ஒருவர் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

பிரபல தாதா ரவி பூசாரி...

பிரபல தாதா ரவி பூசாரி...

இந்நிலையில், அக்‌ஷய்குமார் செல்போனிற்கு மர்ம அழைப்பு வந்துள்ளது. அதில் எதிர் முனையில் பேசிய நபர் தன்னை பிரபல தாதா ரவி பூசாரி எனக் கூறி அறிமுகப் படுத்திக் கொண்டுள்ளான்.

கொலை மிரட்டல்...

கொலை மிரட்டல்...

பின்னர், ‘உங்களது வீட்டில் பணியாற்றிய வேலைக்காரரை பணி நீக்கம் செய்தது தவறு. இதனால் உங்களை கொலை செய்ய போகிறோம்' என அந்த நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.

போலீசில் புகார்...

போலீசில் புகார்...

இதனால் அதிர்ச்சியடைந்த அக்‌ஷய்குமார், இதுகுறித்து உடனடியாக போலீசில் புகார் செய்தார். வழக்கைப் பதிவு செய்த போலீசார், மர்ம நபர் பயன்படுத்திய போன் நம்பரை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஷமிகள் மிரட்டல்...

விஷமிகள் மிரட்டல்...

முதற் கட்ட விசாரணையில் ரவி பூஜாரி பெயரை கூறி யாரோ விஷமிகள் மிரட்டல் விடுத்ததாக தெரிய வந்துள்ளது.

தீவிர விசாரணை...

தீவிர விசாரணை...

பணி நீக்கம் செய்யப்பட்ட நபர் தரப்பில் இருந்து மிரட்டல் வந்ததா? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+