ஆம் ஆத்மியில் இணைந்தார் காங்கிரஸ் முன்னாள் மாணவரணி தலைவி அல்கா லம்பா

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியதன் மூலம், 15 ஆண்டு கால காங்கிரஸ் கட்சியின் ஆட்சி டெல்லியில் முடிவு பெற்றுள்ளது. 28 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் ஆதரவோடு நாளை டெல்லியில் ஆட்சியமைக்க உள்ளது. அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் முதல்வராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியில் சேருவதற்காக காங்கிரஸ் கட்சியின் தேசிய மாணவரணி முன்னாள் தலைவரான 38 வயது அல்கா லம்பா இன்று கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியபின்னர், அல்கா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சில கட்சிகள் மூடிய அறைக்குள் முடிவுகளை எடுக்கின்றன. அதேசமயம் ஆம் ஆத்மி கட்சியோ, முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக மக்களிடம் கேட்கிறது. நான் காங்கிரஸ் கட்சியில் 20 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளேன். ஆனால் நான் எங்கேயோ எதையோ தொலைத்ததுபோல் நினைக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவை அல்கா லம்பா சந்தித்து, கட்சியின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications