நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் எங்கிருந்தாலும் கைது செய்வோம்: ராஜ்நாத் சிங் உறுதி
டெல்லி: நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமைக் கைது செய்வதில் முந்தைய அரசு தோல்வியடைந்து விட்டது. தாவூத் எங்கிருந்தாலும் நாங்கள் கைது செய்வோம் என உறுதியளித்துள்ளார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
300க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிய மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தின் சூத்திரதாரியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

அதே சமயம், அமெரிக்கத் தாக்குதலில் ஒசாமா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் இருந்து தப்பியோடிய தாவூத் இப்ராகிம் தற்போது துபாயில் இருப்பதாகவும் உறுதிப்படுத்த முடியாத சில தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அத்துறையின் அமைச்சர் ராஜ்நாத் சிங், 'தாவூத் இப்ராகிமை பிடிப்பதில் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தோல்வி அடைந்து விட்டது . தற்போது தாவூத் இப்ராகிமை கைது செய்ய மத்திய அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. அவன் எங்கிருந்தாலும் நாங்கள் கைது செய்வோம்' என அவர் உறுதி படத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications