டெல்லிவாசிகளே பிரார்த்தியுங்கள்.. பிராத்தனை வலிமையானது: ட்விட்டரில் அரவிந்த் கேஜ்ரிவால்
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு சற்று முன்னர் டெல்லிவாசிகளை பிரார்த்திக்குமாறு ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிதான் அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றும் என்றே கருத்து கணிப்புகள் கூறி வருகின்றன.
All the very best Delhiites. Do pray. Prayers are v powerful.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 10, 2015 டெல்லியில் 14 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை முதலே ஆம் ஆத்மி மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளின் தலைமை அலுவலகங்கள், தலைவர்களின் வீடுகள் முன்பாக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
இதனிடையே வாக்கு எண்ணிக்கைக்கு சற்று முன்னர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லிவாசிகளே உங்களுக்கு நல்வாழ்த்துகள்.. பிரார்த்தியுங்கள்... பிரார்த்தனை மிகவும் வலிமையானது என்று கூறியுள்ளார்.
மேலும் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஜெகதீஷ் முகி, 35 தொகுதிகளுக்கும் அதிகமாக வெல்வோம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications