ஐடி ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஏன்? டெக் மகிந்திரா, தெலுங்கானா அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி நோட்டீஸ்
டெக் மகிந்திரா நிறுவனத்தின் ஊழியர்கள் அதிரடியாக நீக்கப்பட்டது தொடர்பாக அந்த நிறுவனமும், தெலுங்கானா அரசும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஹைதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசா கட்டுப்பாடு , ஐடி நிறுவனங்களின் எதிர்பாராத வீழ்ச்சியினாலும் ஐடி மற்றும் தொழில்தொடர்பு நிறுவனங்கள் ஆட்குறைப்பு என்னும் டெர்மினேஷன் நடவடிக்கையில் இறங்கி ஊழியர்களின் சோற்றுக்கு உளை வைத்து வருகின்றன.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்தப் பதவிக்கு வந்த உடன் முதல்வேலையாக இந்திய ஐடி நிறுவனங்களுக்கு கடிவாளம் போட்டார். இதனால் அவுட்சோர்சிங் துறையில் கடும் சரிவை சந்தித்த முன்னணி நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களை காரணம் ஏதுமின்றி வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் ஹைதராபாதில் உள்ள டெக் மகிந்திரா நிறுவனத்தில் பணியாற்றிய 4 பேரை அந்த நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது. இதைத் தொடர்ந்து அந்த 4 பேரும் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதி எம்.எஸ். ராமசந்திர ராவ் தலைமையில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது.
அந்த வழக்கில், நாங்கள் 4 பேரும் சட்டவிரோதமாக பணியிலிருந்த நீக்கப்பட்டுவிட்டோம். இதுகுறித்து தொழிலாளர் நலத் துறையை நாடினோம். ஆயினும் அவர் எங்கள் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
நாங்கள் வேலையை இழந்துள்ளதால் எங்கள் வாழ்வாதாரத்துக்கு வழியின்றி தவித்து வருகிறோம் என்று ஊழியர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
நீதிபதி கூறுகையில், நீக்கப்பட்ட பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்த்து கொள்ளாதது ஏன்? இதுகுறித்து டெக் மகிந்திரா விளக்கம் அளிக்க வேண்டும். அதேபோல் பணிநீக்க நடவடிக்கை சட்டப்படி நிகழ்ந்துள்ளதா என்பதை ஆராயத் தவறியது ஏன் என்பது குறித்து தொழிலாளர் நலத் துறை விளக்கம் அளிக்க வேண்டும். இவை அனைத்தும் இன்னும் 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications