சகோதரியின் மகளை 3 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த அலையன்ஸ் யுனிவர்சிட்டி வேந்தர் கைது
பெங்களூர்: சகோதரியின் மகளை மூன்று ஆண்டு காலமாக பாலியல் பலாத்காரம் செய்த பெங்களூரில் உள்ள அலையன்ஸ் பல்கலைக்கழக வேந்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரின் ஆனேக்கலில் செயல்பட்டு வருகிறது அலையன்ஸ் பல்கலைக்கழகம். அதன் வேந்தராக இருப்பவர் டாக்டர் மதுகர் ஜி. அன்கூர்(59). அவரது மனைவி பிரியங்கா. அன்கூரின் சகோதரியின் 33 வயது மகள் எம்.பி.ஏ. முடித்துவிட்டு அலையன்ஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

பல்கலைக்கழகத்தின் மானேஜிங் டைரக்டராக இருந்த சகோதரியின் மகளை அன்கூர் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தன் ஆசைக்கு இணங்காவிட்டால் பணிநீக்கம் செய்துவிடுவேன் என்று மிரட்டியே காரியம் சாதித்துள்ளார் அன்கூர்.
இதனால் மனமுடைந்த அந்த பெண் கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது பணியை ராஜினாமா செய்தார். அதன் பிறகும் மனதளவில் பாதிக்கப்பட்ட அவருக்கு செகந்திராபாத்தில் கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.
அப்போது தான் அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி தெரிவித்துள்ளார். இது பிரியங்காவுக்கு தெரியும் என்றும், அவரும் தன்னை மிரட்டினார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த பெண்ணின் தாய் பெங்களூர் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அன்கூரை ஜே.பி. நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
அலையன்ஸ் பல்கலைக்கழகத்தை நடத்துவது மற்றும் சொத்து பிரச்சனை இருப்பதால் அன்கூரின் பெயரை கெடுக்க வேண்டும் என்றே அவரது சகோதரி பொய் புகார் அளித்துள்ளதாக பிரியங்கா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications