For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வயலில் இருந்து வந்தனர்.. துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்கள்.. அல்வார் கொலையின் நேரடி சாட்சியம்

பாஜக ஆளும் ராஜஸ்தானில் பசு தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட ரஃபர் கொலை செய்யப்பட்டதை நேரடியாக பார்த்த நபர் திடுக்கிடும் சாட்சியம் அளித்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    அல்வார் படுகொலையின் சாட்சியின் நேரடி வாக்குமூலம்- வீடியோ

    ஜெய்ப்பூர்: பாஜக ஆளும் ராஜஸ்தானில் பசு தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட ரஃபர் கொலை செய்யப்பட்டதை நேரடியாக பார்த்த நபர் திடுக்கிடும் சாட்சியம் அளித்து இருக்கிறார்.

    ரஃபர் என்ற விவசாயி ராஜஸ்தானில் பசு தீவிரவாதிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரும், அவரது நண்பர் அஸ்லாம் கானும் ஒன்றாக சேர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை பசுமாடு வாங்கி கொண்டு தங்கள் வீட்டிற்கு வந்துள்ளனர்.

    விவசாய தேவைக்காக அவர்கள் மாடு வாங்கி வந்துள்ளனர். அப்போது பசு தீவிரவாதிகள் அவரை மறைத்து கொடூரமாக கொலை செய்து இருக்கிறார்கள்.

    தப்பித்தார்

    தப்பித்தார்

    இதில் அஸ்லாம் மட்டும், அந்த தீவிரவாதிகளிடம் இருந்து தப்பித்து வந்துள்ளார். வயதான அவர் தற்போது பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். விவசாய தேவைக்காக மூன்று மாடுகள் வாங்க சென்றோம். ஏற்கனவே மாடு வாங்கிய போது, வழக்கு போட்டு மாட்டை வாங்கி கொண்டார்கள், அதனால் மீண்டும் மாடு வாங்க சென்றோம் என்று கூறினார்.

    வயல்

    வயல்

    அப்போது இடையில் வழியை மறைத்து இருந்தனர்.நாங்கள் வரும் வழியில் மாடுகள் சில வயலில் இறங்கியது. உடனே வேக வேகமாக 20க்கும் மேற்பட்ட ஆட்கள் வந்து எங்களை தாக்கினார்கள். சிலர் தூரத்தில் இருந்து துப்பாக்கியில் சுட்டார்கள். எங்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை. நான் உடனே வேகமாக ஓடிவிட்டேன்.

    துப்பாக்கியால் சுட்டார்கள்

    துப்பாக்கியால் சுட்டார்கள்

    அவர்கள் எங்களை நோக்கி சரமாரியாக சுட்டார்கள். ரஃபருக்கு காலில் காயம் ஏற்பட்டது. நான் வேகமாக தப்பி வயலுக்குள் ஒளிந்து கொண்டேன். எல்லோரும் பின் சேர்ந்து ரஃபரை தாக்கினார்கள். மாற்றி மாற்றி இரும்பு கம்பியால் தாக்கினார்கள். பின் என்னையும் தேடினார்கள்.

    மிகவும் கொடூரம்

    மிகவும் கொடூரம்

    ஆனால் நான் அங்கிருந்து ஓடி ஊருக்கு வந்துவிட்டேன். கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்துவிட்டது. இப்படி ஒரு விஷயம் நடக்கும் அவர்களுக்கு முன்பே தெரிந்து இருக்கிறது. எல்லாவற்றையும் திட்டமிட்டு அவர்கள் இதை செய்து இருக்கிறார்கள். இதில் போலீஸ் எங்களை தினமும் விசாரித்து தொந்தரவு செய்கிறது. எங்கள் மீது ஏற்கனவே வழக்கு இருக்கிறதா என்று விசாரிக்கிறது என்றுள்ளார்.

    English summary
    Alwar Cow Lynching: Rabar's relative Aslam sees the venom of Hindu terror with his own eyes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X