விரைவில், அமர்சிங்கின் ‘லோக் மஞ்ச்’ வேறு அரசியல் கட்சியுடன் இணைகிறது: ஜெயப்பிரதா அறிவிப்பு

உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவர் அமர்சிங். கடந்த 2010ம் ஆண்டு அமர்சிங்கிற்கும், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங்குடன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கட்சியில் இருந்து வெளியேறினார் அமர்சிங். அப்போது அவருடன் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்ற ஜெயப்பிரதாவும் வெளியேறினார்.
அதன்பின்னர் ராஷ்டிரிய லோக் மஞ்ச் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கிய அமர்சிங்கால், சட்டசபைத் தேர்தலில் ஒரு இடத்தைக் கூட பிடிக்க இயலவில்லை. எனவே, லோக் மஞ்ச் கட்சியை வேறு ஒரு அரசியல் கட்சியுடன் இணைக்க திட்டமிட்டுள்ளார் அமர்சிங்.
இது குறித்து நேற்று ஜெயப்பிரதா எம்.பி கூறியதாவது, ‘ராஷ்டிரிய லோக் மஞ்ச் கட்சி, விரைவில் வேறு ஒரு அரசியல் கட்சியுடன் இணையும். இதற்கான அறிவிப்பை கட்சியின் தலைவர் அமர்சிங் விரைவில் அறிவிப்பார். பொதுத்தேர்தல் நெருங்கிவிட்டதால் லோக் மஞ்ச் கட்சியை இணைப்பதில் தாமதம் செய்யக்கூடாது.
ராம்பூரில் ராம்பூரில் சுற்றுப்பயணம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரசின் செய்திகளை பரப்பி வருகிறார்' எனத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, தனது பேச்சில் ஜெயப்பிரதா காங்கிரஸையும், ராகுல் காந்தியையும் புகழ்ந்து பேசியுள்ளதால், அவரது கட்சி காங்கிரசுடன் இணையலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications