பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அமரீந்தர் சிங்!!
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க அமரீந்தர் சிங் உரிமை கோரியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க அமரீந்தர் சிங் உரிமை கோரியுள்ளார். பஞ்சாப் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை நிரூபித்துள்ள நிலையில் அம்மாநில ஆளுநரை சந்தித்து அமரீந்தர் சிங் உரிமை கோரியுள்ளார்.
உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளில் காங்கிரஸ் 77 தொகுதிகளைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையை பெற்றது.

அகாலிதளம் 15, பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றன. ஆம் ஆத்மி கட்சி 20 தொகுதிகளைக் கைப்பற்றியது.
இதன்மூலம் சிரோன்மணி அகாலி தளம் - பாஜக கூட்டணி தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்தது. இதையடுத்து அம்மாநில காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் அமரீந்தர் சிங் இன்று ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.












Click it and Unblock the Notifications