லோக்பால் மசோதா ராஜ்யசபாவில் தாக்கல்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட லோக்பால் மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது.
நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடரின் 5வது நாளான இன்றும் தனி தெலுங்கானா விவகாரம், விலைவாசி உயர்வு உள்பட பல்வேறு பிரச்னைகள் வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் ராஜ்யசபா முதலில் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் சபை கூடியதும், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே மத்திய இணையமைச்சர் வி.நாராயணசாமி, லோக்பால் மசோதாவை தாக்கல் செய்தார்.
ஆனால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சபை பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக லோக்சபாவில் முதலில் பகல் 1 மணி வரையும் பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications